Cinema

ராஜ்கிரண் மகள் வாழ்க்கையில் நடந்த சோகம்..!

Rajkiran, Zeenat Priya
Rajkiran, Zeenat Priya

நடிகர் ராஜ்கிரண் இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். சினிமாவில் இவர் நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் இவரே. தமிழில் பாண்டவர் பூமி மூலம் மக்கள் இடத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சண்டைக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் ராஜ்கிரண் பெயர் மக்களிடத்திலும் ரசிகர்கள் இடத்திலும் பெரிய அளவு பேசப்பட்ட நபராக தோன்றினார். தற்போது ராஜ்கிரண் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.


ராஜ்கிரனின் மகள், ஜீனத் பிரியா காமெடி நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில ஆண்டுகளால தகவல் வெளியானது. சின்னத்தரையில் நாதஸ்வரம் என்ற தொடரின் மூலம் காமெடி நடிகரான அறிமுகமானவர் முனீஸ் ராஜா. தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான சண்முகராஜனின் தம்பியான இவர் தொடர்ந்து முல்லும் மலரும் தொடரில் நடித்தார். முனீஸ் ராஜா, ராஜ்கிரன் மகள் ஜீனத் பிரியாவுடன் பேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் பழக்கம் காதலாக மாறிய நிலையில், இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்திலும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  

இதனால் வீட்டை வீட்டு வெளியேறிய நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ராஜ்கிரண் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன. ஒரு கட்டத்தில், மகளின் திருமண செய்தி குறித்து நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட அறிக்கையில்... "தனக்கு நைனார் முகம்மது என்கிற மகன் மட்டுமே இருப்பதாகவும், அவரைத்தவிர வேறு எதுவும் பிள்ளைகள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், முனீஸ் ராஜா மாக மட்டமான புத்தி கொண்டவர், பணத்துக்காக எதையும் செய்யும் ஈன தனம் கொண்டவர் என அந்த அறிகையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார் ராஜ்கிரண்.

இதற்கிடையில், திருமணத்திற்கு பிறகும் மகள் பிரியா தன் தாய் மீது புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதாவது என்னை பற்றி தவறாக சமூக வலைதளங்களில் பேச வைக்கிறார்கள் என்றும் என்னை போனில் தொடர்பு கொண்டு மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறார்கள் என்றும் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்து அந்த வீடியோவை ஒரு சமயம் வெளியிட்டிருந்தார். அப்போது போலவே இன்றும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் என்றும் முனீஷ் ராஜை திருமணம் செய்தேன் என்றும் ஆனால் நாங்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்வதாகவும் இந்த திருமணம் சட்டப்படி நடக்கவில்லை என்றும் கூறி, எனது அப்பாவை மிகவும் நான் காயப்படுத்திவிட்டேன் என்றும் சாரி டேடி என்றும் கூறி அழுது, இந்த திருமணத்திற்காக என் அப்பாவை மிகவும் அசிங்கப்படுத்திவிட்டேன்.

நான் இவ்வளவு செய்த போதும் கூட, எனக்கு ஒரு பிரச்னை என வந்த போது என் தந்தை சத்தியமாக வந்து உதவினார். இது நான் எதிர்பாராத கருணை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா என கண்ணீருடன் கதறியுள்ளார் பிரியா. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மொத்ததில் முனீஷ்ராஜுடன் பிரியா ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது பிரிந்து வாழ்கிறார் என்று புரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ராஜ்கிரண் வளர்ப்பு மகள் தற்போது நாடக காதலால் பாதிக்கப்பட்டு தன் தந்தையிடம் மன்னிப்பு கோரினார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் திரைத்துறையில் இருப்பவர்களிடம் சோகத்தில் தள்ளியுள்ளது. மேலும் ராஜ்கிரண் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.