Cinema

ராம்சரனின் மகள் குறித்து ஜோதிடர் கூறியது என்ன...? பரபரப்பில் டோலிவுட்!!

RAMSARAN
RAMSARAN

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் உள்ளார். இவரது தந்தை தெலுங்கு திரையுலகில் எப்படி டாப் ஹீரோவாக இருக்கிறாரோ அதேபோன்று ராம் சரணும் தற்போது தெலுங்கில் முன்னணி மற்றும் டாப் ஹீரோவாக இருக்கிறார். ராம்சரண் முதலில் சிருந்தா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார் அந்த படமே ராம்சரனுக்கு நல்ல வரவேற்பையும் மாஸ் ஹிட் கொடுத்தது. அதற்குப் பிறகு மகதீரா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என மற்ற மொழி ரசிகர்களையும் தன் வசபடுத்தினார். அதற்குப் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ராம்சரண் 2012 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான உபாசனாவை திருமணம் செய்து கொண்டார். இந்த இரண்டு தம்பதிகளும் அவ்வப்போது விடுமுறை நாட்களில் வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டு புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் தெலுங்கு திரை உலகில் முன்னணி ஜோடிகளின் அதிக ரசிகர்கள் கூட்டத்தை பெற்ற ஒரு ஜோடியாகவும் ராம்சரண் உபாசனா உள்ளனர்.


எனினும் இவர்கள் திருமணம் செய்து 10 வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளவே இல்லை! அதற்குப் பல வதந்திகள் மற்றும் பல காரணங்கள் சினிமா வட்டாரம் முழுவதும் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது கடந்த 2022 ஆம் ஆண்டு விரைவில் குழந்தை தங்களுக்கு பிறக்க உள்ளதாக ராம்சரண் உபாசனா தம்பதிகள் அறிவித்தனர். மேலும் இந்த மகிழ்ச்சியான செய்தியை ராம்சரனின் தந்தையான சிரஞ்சீவியும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.. இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் கர்ப்பிணியான உபாசனாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது அந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், சானியா மிர்சா மற்றும் அவர்களது நண்பர்கள் என அனைத்து துறை பிரபலங்களும் ராம்சரணியின் குடும்பத்தினர் அனைவரும் சிறப்பாக கலந்து கொண்டு ஒரு மாபெரும் விழாவாக அதனை கொண்டாடினர். இந்த நிலையில் ஜூன் இருபதாம் தேதி 2023 ஆம் ஆண்டு அன்று உபாசனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

பதினோரு ஆண்டு கால காத்திருப்புக்கு பின் ராம்சரண் தந்தையாகியுள்ளதும் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது ராம் சரணின் குடும்பத்தையும் அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உபாசனா தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த பொழுது நான் வாழ்க்கையில் பிற்பகுதியில் ஒரு குழந்தையை பெற முடிவு செய்து அதற்காக நான் வருத்தப்படவில்லை அது என் விருப்பம் சார்ந்தது தற்பொழுது நான் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தயாராகி வருகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் மீண்டும் ராம் சரண் மற்றும் உபாசனாவிற்கு இரண்டாவது குழந்தை குறித்த செய்திகள் வெளியாகும் என்ற பேச்சுகள் இருந்து வந்த நிலையில் ராம் சரணின் மகளான கிளின் காரா ஜாதகம் குறித்து பிரபல ஜோதிடர் வேணுசாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதாவது மஹித் ஜாதகத்தில் பிறந்த கிளின் காரா மகாராணியாக வாழும் அம்சம் கொண்டவர் என்று கூறியுள்ளார். இதற்கு ஒரு வயது கூட நிரம்பாத ஒரு குழந்தையின் ஜாதகத்தை எப்படி அவரால் கணித்து கூற முடியும் என்ற விமர்சனங்களை முன் வைத்தனர் அப்பொழுது, முன் காலங்களில் ராஜாக்களுக்கும் இளவரசர்களுக்கும் குழந்தைகள் பிறந்த அன்றைய தினமே குழந்தையின் ஜாதகம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜோதிடர்கள் கணித்து கூறுவார்கள் அப்படி இருக்கும் பொழுது நான் கணித்து கூறுவதில் என்ன தவறு இருக்கிறது என்று பதில் கூறியிருந்தார்.மேலும், பாலாரிஷிடம் உள்ள குழந்தைகளின் ஜாதகத்தை மட்டுமே பிறந்த உடன் கூறக்கூடாது, அதோடு  ஏழு வயதுக்குள் பிரகடனம் இருந்தாலும் ஜாதகம் சொல்லக்கூடாது என சாஸ்திரம் கூறுகிறது என்று ஜோதிடர் வேணு சுவாமி பதிலளித்துள்ளது டோலிவுட் வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.