24 special

வக்பு சொத்து... நீதிமன்றம் கொடுத்த கனவிலும் எதிர்பாராத அதிரடி. .. அடித்து சொன்ன நீதிபதி. .. மொத்த விஷயமும் வந்துருச்சு...!

Pmmodi, highcourt
Pmmodi, highcourt


தமிழகத்தில் இந்து கோவில்கள் அனைத்தும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்கள் கோவிலில்  அளிக்கும் உண்டியல் காணிக்கை மொத்தமும் தமிழக அரசுக்கு எடுத்து கொள்ளும். அதில் கோவில்களுக்கு மட்டுமல்ல தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் கோவில் பணத்தை பயன்படுத்தி வந்துள்ளது. ஆனால் இஸ்லாமியர் சொத்துக்களை அரசு கண்டுகொள்ளாது மதசார்பற்ற அரசாங்கம் என கூறும் தமிழக வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்துக்கள் என்றால் ஒரு நியாயம் மற்ற மதங்கள் என்றால் ஒரு நியாமாமா என்ற கேள்விகள் எழ தொடங்கியுள்ளது. 



முத்தலாக்கை தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு இஸ்லாமியர்களில் பெரும்பாலோனார் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பின்தங்கிய இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தை இந்த சட்டத் திருத்தம் உறுதி செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடையேஆதரவை பெற்று வருகிறது. ஒட்டு வங்கி அரசியலுக்காக  அரசியல் கட்சிகள்  வக்பு சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இது இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை கிளப்பியுள்ளது. 


இந்தியாவில், ரயில்வே மற்றும் ராணுவத் துறைக்கு அடுத்தபடியாக அதிகமான நிலங்களை வக்ஃப் வாரியமே உரிமையாக வைத்திருக்கிறது. இதனால் வக்ஃப் வாரியமே இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமையாளர் ஆகும்.நாடு முழுவதும் 1.2 லட்சம் கோடி மதிப்பிலான 9 லட்சத்துக்கும் அதிகமான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்துக்கு உள்ளன. மேலும் சில கிராமமே வக்பு சொத்து என கூறி அதை நீதிமன்றம் சென்று மீட்ட செய்திகளும் இருக்கிறது. 


இந்த நிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து மசூதி கட்டி இது வக்ப் சொத்து என அனுபவித்து வந்த நீண்ட கால சர்ச்சை ஒன்று கோர்ட் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றமே இதுகுறித்து அதிர்ச்சியடைந்தது. 14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.


உத்திரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் வக்ப் பெயரில் பெரும் நிலத்தை ஆக்கிரமித்து மசூதி மற்றும் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் கட்டடங்கள் கட்டி இதன் மூலம் பெரும் வாடகை, வருமானத்தை ஒரு டிரஸ்ட் மூலம் சிலர் அனுபவித்து வந்துள்ளனர். இது தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முயன்றபோது வக்ப் மதரஸாவை சேர்ந்த 'காசிம் உல் உலூம்' என்பவர் 2011ல் கோர்ட்டை நாடினார். இதற்கு உரிய ஆவணங்களை கோர்ட் கேட்டது. கீழ் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடியானது.


இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இங்கும் விசாரணை மனுதாரருக்கு சாதகமாக கிடைக்கவில்லை. இந்த மனு நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடந்தது. 1995 ஆம் ஆண்டு வக்ப் சட்டத்தின் கீழ் சொத்து வக்ப் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மனுதாரரால் நிரூபிக்க முடியவில்லை. அந்த நிலம் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானது என்றும், வக்ப்பின் வாதம் வெறும் வாய்மொழி மட்டுமே என்றும், இது எந்த வகையிலும் நிரூபிக்கப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி மனுவை தள்ளுபடி செய்தது.


இந்த சொத்துக்கள் மூலம் பலர் பயன் பெற்றுள்ளனர் என்றும், ஆச்சரியமாக இருப்பதாகவும், இது ஒரு தனித்துவமான வழக்காக கருதுவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சொத்து யாருக்கு உரிமை உள்ளது, இதில் கலெக்டர் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளிட்டவை கோர்ட்டில் விவாத பொருளாக உள்ளது. இவ்வாறு இருக்கும் போது இது போன்ற தீர்ப்புகள் உத்திர பிரேதேசத்தில்  பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.