24 special

காலையில் உதயநிதி தலையில் இடியை இறக்கிய டெல்லி.. முழுவதுமா ஓரம் கட்டப்பட்ட உதயநிதி... தலைகீழாக மாறிய திருப்பம்..!"

udhayanidhistalin,delhiuniversity
udhayanidhistalin,delhiuniversity

மதுரையில் ஜூன் 1ஆம் தேதி நடந்த திமுக பொதுக் குழு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அதன்பிறகு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் குறிப்பாக காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் காரணமாக அவதிப்படுவதால் மருத்துவர்கள் உதயநிதி ஸ்டாலினை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், இதனால் அவருடைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.


தற்போது நாடு முழுக்க கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலானது. ஆனால், உதயநிதிக்கு காய்ச்சல் மட்டும்தான் வேறு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்த சுகாதாரத் துறை, அவர் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.  முன்னாள் முதல்வரும்  தாத்தாவுமனா கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழாவிலும் கூட உதயநிதி கலந்துகொள்ளவில்லை இது தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏனென்றால் மதுரையில் நடந்த பொதுக்குழுவில் மேடையில் ஏற்றப்படவில்லை. துணை பொதுச்செயலாளர் கிடைக்கும் என நினைத்திருந்த இது உதயநிதிக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. 

உதயநிதி பிரச்னை குடும்பத்திலும் வெடித்துள்ளது, உதயநிதி கனிமொழி அரசியல் விளையாட்டுகள் மீண்டும் கோபாலபுரத்தில் வெடிக்க தொடங்கியுள்ளதாம். கனிமொழி திமுகவின் அதிகாரத்துக்கு வந்து விட கூடாது என உதயநிதி கங்கணம் காட்டி கொண்டுள்ளாராம். இதற்காகத்தான் முக ஸ்டாலினுடன் மல்லுக்கட்டி நிற்கிறார். ஒருவேளை முதல்வர் ஸ்டாலின் இருக்கும் போதே உதயநிதி முதல்வராக வந்தால் தான் வர முடியும். உதயநிதி தலைமையில் தேர்தலை சந்தித்தால் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை கூட திமுக பெறாது என மருமகன் கூறிவிட்டாராம்.  இதனால் தான் முதல்வர் முக ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் உள்ளார் உதயநிதி.

மதுரையில் நடந்த பொதுக்குழுவில், உதயநிதி தனக்கு திமுகவில் அடுத்தகட்ட பொறுப்பு வேண்டும், அப்போது தான் திமுகவில் முக்கிய முடிவு எடுக்கும் இடத்திற்குள் நான் வரமுடியும் என முதல்வர் முக ஸ்டாலினுக்கு தன்னுடைய தாயார் துர்கா அம்மா மூலம் காய்களை நகர்த்தியுள்ளார் உதயநிதி . ஆனால் முதல்வர் சமீபத்தில் உதயநிதி நண்பர்களான ரத்தீஸ், விக்ரம் ஜூ ஜூ ஆகியோரால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை சுட்டி காட்டி கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என முதல்வர் தெரிவித்து விட்டதாக கூறப்டுகிறது.குடும்பத்தில் பிரளயத்தை கிளப்பியுள்ளது. 

ஏனென்றால்  முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு,  முதல்வர் மனைவி துர்காஸ்டாலின் பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் எண்பதாவது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தது.  மு க ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதற்கு முன்பு மத்திய நிதி அமைச்சரை கனிமொழி நேரில் சென்று சந்தித்தது.இப்படி திமுகவின் முதல் குடும்பம்  அடுத்தடுத்து பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது எல்லாம் உதயநிதியை காப்பாற்ற றன சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இந்த நிலையில் தான்  உதயநிதி பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போட்டது டெல்லி தான் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை  உதயநிதிக்கு எதிரான  ஆதரங்களை திரட்டியுள்ளது எப்போது வேண்டுமானாலும் ரெய்டு  இருக்கும் இந்த நிலையில் எதற்கு பதவி உயர்வு  என  டெல்லியில் உள்ள முக்கிய வழக்கறிஞர்கள் டீம் கனிமொழி , மருமகன் ஆகியோர் முதல்வரிடம் கூறியுள்ளார்கள். இதனால் தான்  முதல்வர் உதயநிதிக்கு பெரிய அளவில்  முக்கியத்துவம் கொடுக்கவில்லையாம்.