
இந்த நூற்றாண்டில் உலக நாடுகள் பாதுகாப்பு மற்றும் நவீன ராணுவ தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றன. அந்த சவாலான சூழலில், இந்தியாவும் தன்னிச்சையான, உள்நாட்டில் தயாரிக்கும் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் ஒரு வலிமையான நாடாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கான சிறந்த உதாரணமாக சூர்யா ரேடார் ஆகும்.
இந்தியாவின் பாதுகாப்பு துறையில் வந்த பெரும் மாற்றத்திற்கு காரணமானவர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அவருடைய "Make in India" மற்றும் "Aatmanirbhar Bharat" எனும் திட்டங்கள், நம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன. இதில் பாதுகாப்புத் துறை முக்கியமான பங்கு வகிக்கிறது.
முன்பு நம்மிடம் இருந்த முக்கியமான பாதுகாப்பு சாதனங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது, நமது சொந்த DRDO, ISRO, BEL போன்ற நிறுவனங்கள், உலக தரத்திற்கேற்ப தொழில்நுட்பங்களை உருவாக்கி, நாட்டின் பாதுகாப்பை உள்ளிருந்து வலுப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு 5வது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களைச் சீனா வழங்க உள்ள நிலையில், இந்தியா ஸ்டெல்த் போர்விமான எதிர்ப்பு ரேடாரை உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளது.நமது நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் மாபெரும் வெற்றியாகக் கருதப்படும் சூர்யா ரேடாரை பார்த்து உலக நாடுகள் மூக்கின் மேல் விரல் வைத்துள்ளார்கள்.
சமீப நாட்களாக இந்தியா தொடர்ந்து அதன் பாதுகாப்பு திறன்களை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது. மிக விரைவாக வளர்ந்து வரும் உலகத்தில், நாடுகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பல நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில், இந்தியா தற்போது உருவாக்கி வரும் முக்கியமான பாதுகாப்பு சாதனங்களில் ஒன்று தான் சூர்யா ரேடார் இந்தியா தற்போது உள்நாட்டிலேயே Surya Very High Frequency ரேடார் அமைப்பை உருவாக்கி அதிரடி காட்டியிருக்கிறது. இந்த ரேடார் அமைப்பு மிகவும் நவீனமானது. ஏனெனில் இது ஆறாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களைக் கூட துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டது.
சூர்யா ரேடார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எதிரிகளை கூட முன்கூட்டியே கண்டறியக்கூடிய திறன் கொண்ட ஒரு ரேடார் அமைப்பு.
VHF Band-டில் இயங்கும் சூர்யா ரேடார், நீண்ட அலைநீளங்களைப் பயன்படுத்துவதால் சீனாவின் J-20 போர் விமானங்கள் மற்றும் wing loong ட்ரோன்கள் போன்ற ஸ்டெல்த் விமானங்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டது. இது வழக்கமான ரேடார்களின் கண்ணில் மண்ணை தூவி தப்பிக்கும் விமானங்களைக் கண்டறியும் ஆற்றல் கொண்டது. மேலும் இந்த ரேடார் 360 கிலோமீட்டர் தொலைவில் 2 சதுர மீட்டர் ரேடார் குறுக்குவெட்டுடன் இலக்குகளைக் கண்டறிய முடியும் என்பது ஆச்சரியமே. மட்டுமல்லாமல் இது 360 டிகிரி கவரேஜை கொடுப்பதோடு நிமிடத்திற்கு 10 முறை சுழன்று துல்லியமான முறையில் கண்காணிக்கிறது.
200 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்டெல்த்-போர் விமானங்களைக் கண்டறியும் ஆறு சூர்யா VHF ரேடார் அமைப்பை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ரேடார் அமைப்பை இந்தியா விமானப்படைக்கு வழங்கியது.பாதுகாப்பு தொழில்நுட்பத்துக்கு இறக்குமதியை நம்பி இருப்பதைக் குறைப்பதற்காகச் செயல்படுத்தப் பட்ட ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் இன்னொரு வெற்றி தான் Anti-stealth Surya VHF radar. இது இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கான தொழில் நுட்ப வளர்ச்சியில், ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.இந்த ரேடார் உள்நாட்டு வான் பாதுகாப்பு கட்டமைப்பு, ஆகாஷ் மற்றும் QRSAM ஏவுகணை அமைப்புடன் சேர்ந்து செயல்படும் பட்சத்தில் சீனாவின் போர் விமானங்கள் இந்த ரேடாரிலிருந்து தப்பிக்க முடியாது என்பது நிச்சயம்.
இது ஒரு சாதாரண ரேடார் திட்டம் அல்ல; இது இந்தியாவின் தன்னம்பிக்கையின் அடையாளம். நமது நாட்டின் அறிவியல் திறமை, தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் பாதுகாப்பு முன்னேற்றம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் முன்னோக்கி அழைத்துச் செல்லும் திட்டம்.