
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தன. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, ஆத்திரமடைந்த பாகிஸ்தான் இந்திய எல்லையில் உள்ள குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம், டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவை தாக்க முயற்சி செய்தது. இந்தியா, தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த தாக்குதல் முயற்சியை முறியடித்தது. இந்தியாவை தாக்க பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் துருக்கியில் இருந்து தயாரானவை என்பதும் தெரியவந்தது.
இந்த மோதலில் துருக்கி பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தது. நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை துருக்கி கண்டித்தது. அதுமட்டுமின்றி துருக்கி தனது நாட்டு ட்ரோன்களையும், ட்ரோன் ஆபரேட்டர்களையும் பாகிஸ்தானுக்கு வழங்கியது. அவர்கள் தான் பாகிஸ்தானில் இருந்து கொண்டு ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.
இதனால் துருக்கிக்கு எதிராக நம் நாட்டு மக்கள் திரும்பி உள்ளனர்.. துருக்கிக்கு சுற்றுலா செல்வது, துருக்கி நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் மேற்கொள்வது உள்ளிட்டவற்றை கைவிட்டுள்ளனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி நம் நாட்டில் செயல்பட்டு வரும் துருக்கி நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் இந்தியார்களின் பொருளாதரா நடவடிக்கையால் கடந்த மூன்று வாரத்தில் துருக்கிக்கு 50,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை எகிற ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையே தான் இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் துருக்கி ஏர்லைன்ஸின் போயிங் 777எஸ் என்ற 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை குத்தகை பெற்று இண்டிகோ இயக்கி வருகிறது. இந்த விமானங்களின் குத்தகை காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து குத்தகை காலத்தை 6 மாதங்கள் நீட்டிக்க இண்டிகோ அனுமதி கோரியது. ஆனால் விமான இயக்குநரகம் 3 மாதங்கள் மட்டுமே அனுமதி கொடுத்தது. அதோடு அதன்பிறகு எந்த காரணத்தை கொண்டும் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படாது என்று தெரிவித்தது. இதன்மூலம் துருக்கி ஏர்லைன்ஸ் உடனான உறவை இண்டிகோ முறித்து கொள்ள உள்ளது.
இதன்மூலம் துருக்கிக்கு மத்திய அரசு பெரிய செக் வைத்துள்ளது. ஏனென்றால் நம் நாட்டில் இருந்து இந்த விமானங்கள்
டெல்லி மற்றும் மும்பையில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு நேரடியாக சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர். தற்போது துருக்கியை நம் நாட்டு சுற்றுலா பயணிகள் புறக்கணித்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்த நம் நாட்டுக்கும் துருக்கிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டால் வருங்காலத்தில் கூட துருக்கிக்கு நம் நாட்டு மக்கள் செல்லலாம்.. ஏனென்றால் நம் நாட்டில் இருந்து துருக்கிக்கு குறைந்த செலவில் நேரடியாக செல்ல முடியும். இதன்மூலம் துருக்கி பலன் கொடுக்கலாம் இப்போது இந்த சேவையை நிறுத்தி உள்ளதன் மூலம் நம் துருக்கி ஏர்லைன்ஸ்க்கான குத்தகையை இண்டிகோ ரத்து செய்ய உள்ளது. அதோடு துருக்கிக்கு மக்கள் செல்வதையும் குறைக்க முடியும்.
முன்னதாக விமான இயக்குநரகம் துருக்கியின் 'ஸெலெபி ஏவியேஷன்' நிறுவனம் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது. டெல்லி, மும்பை, அகமதாபாத் உள்பட 9 விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பயணியர் சேவைகளை இந்த ஸெலபி நிறுவனம் மேற்கொண்டு வந்தது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஸெலபி நிறுவனத்தின் ஒப்பந்தம் என்பது ரத்து செய்யப்பட்டது. இப்போது இண்டிகோ - துருக்கி ஏர்லைன்ஸ் இடையேயான பந்தம் இன்னும் 3 மாதங்களில் முடிவுக்கு வர உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.