24 special

ஒவ்வொரு இந்தியர்களும் கொண்டாட்டம் அதிரடி காட்டிய இந்தியா! மொத்தமாக விழுந்த ஆப்பு! தெறித்தோடிய சீனா !

india,china
india,china

இந்தியா பாகிஸ்தான் இடையேயான இந்த மோதலுக்கு பஹல்காம் தாக்குதலே தொடக்கப் புள்ளியாகும். கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் இறங்கிய தீவிரவாதிகள் அங்கிருந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தினர். அதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் துருக்கி ட்ரோன்கள்,அமெரிக்க போர் விமானம், சீனா ஏவுகணைகளை இந்தியா மீது  பயன்படுத்தியது. ஆனால் அனைத்தையும் தவிடுபொடியாக்கியது இந்தியா. இது உலகநாடுகள் இடையே இந்தியா மீதான பார்வையை விழச்செய்தது. 


இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலின் போது சீன ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்தது.பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய சீன ஏவுகணை குறித்த கேள்விக்குச் சீன பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் அளித்த பதில்உலக நாடுகளை சிரிப்புக்குள்ளாக்கியுள்ளது .இந்தியா பாகிஸ்தானை தாக்க முயன்ற போது பாகிஸ்தான் PL-15E என்ற சீன ஆயுதத்தைப் பயன்படுத்தியது. இது ரேடார் உதவியுடன் பாயும் அதிநவீன சீன ஏவுகணையாகும். இந்தநிலையில் ஒரு வெடிக்காத PL-15E ஏவுகணையை இந்தியா மீட்டெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் ஜாங் சியோகாங் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

PL-15E ஏவுகணை மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை இந்தியா ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்து தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்குமோ எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குச் சீனப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் ஜாங் சியோகாங் அளித்த பதில் பலரையும்சிரிக்கவைத்தது . அதாவது கண்காட்சிக்கு வைக்கப்பட்ட உபகரணங்களை வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜாங் சியோகாங் கூறுகையில், "நீங்கள் குறிப்பிட்ட அந்த ஏவுகணை ஒரு ஏற்றுமதி உபகரணமாகும். அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல முறை பாதுகாப்பு கண்காட்சிகள் வைக்கப்பட்டது" என்றார். இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலுக்குப் பிறகு சீன பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நடைபெறும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும். மேலும், இந்தியா பாகிஸ்தான் மோதல் சமயத்தில் சீன ஆயுதங்கள் குறைவான செயல்திறனையே வெளிப்படுத்தியதாகச் சொல்லப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும் அதற்குச் சீன அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

இது குறித்து உலகநாடுகள் சீனவை கிண்டலடித்து வருகிறார்கள் சீனா தயாரித்துள்ள ஆயுதங்களின் செயல்திறனை போர்க்களத்தில் சோதித்தறியும் வாய்ப்பாகவும் இந்தியா - பாகிஸ்தான் மோதலை சீனா பயன்படுத்திக்கொண்டது.கிண்டலடிக்க தொடங்கிவிட்டது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) சமீபத்திய அறிக்கையின்படி, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய ஆயுத சப்ளையராக சீனா உருவெடுத்துள்ளது. 2020 முதல் 2024 வரை பாகிஸ்தான் கொள்முதல் செய்த ஆயுதங்களில் 81 சதவீதம் சீனாவில் இருந்தே வந்துள்ளது.

இதில் மேம்படுத்தப்பட்ட போர் விமானங்கள், ரேடார், கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவை அடங்கும். பாகிஸ்தான் விமானப்படையின் (PAF) முக்கிய அம்சமான J-17 விமானங்களை இரு நாடுகளும் கூட்டாகவே தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் அதிநவீன ஆயுதங்கள் தயாரிக்கும் நாடுகளில் அமெரிக்கா துருக்கி சீனா ஆகிய நாடுகள் உள்ளது. இந்த மூன்று நாடுகளின் அதிநவீனவிமானம் ,ஏவுகணைகள் முதல் ட்ரோன்களை இந்திய ரஷ்ய தயாரிப்புகள் லெப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளது இந்திய ராணுவம்.