Politics

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறித்து வைரலாகும் தகவல்!

Minister rajenthrabhalaji
Minister rajenthrabhalaji

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என சிவகாசி தொகுதியை சேர்ந்த ஒருவர் எழுதிய பதிவு ராஜபாளையம் பகுதிகளில் அதிக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.


அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய குறிப்புகள் உங்களுக்காக..கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இரட்டை இலையில் ஏன் வாக்களிக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என தொடங்குகிறது அந்த பதிவு....கடந்த 10 வருடங்களாக சிவகாசி  தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.  இரண்டு பீரியடிலும், தமிழக  அமைச்சரவையில் தொடர்ந்து  இடம்பெற்று வருகிறார். தற்போது ராஜபாளையம் தொகுதியில்  போட்டியிடுகிறார்.

 இந்திய அரசியலமைப்புச் சட்டம்  நடைமுறைக்கு வந்த பிறகு, 1952-லிருந்து சட்டமன்றத்துக்கான  தேர்தல், தமிழகத்தில் நடைபெற்று  வருகிறது. கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு முன்,  சிவகாசி தொகுதி மக்கள்,   காங்கிரஸ், சுதந்திரா கட்சி, திமுக,  ஜனதா, அதிமுக, த.மா.கா., மதிமுக கட்சிகளைச் சேர்ந்த 10 பேரை  எம்.எல்.ஏ.க்களாக்கி, சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 2011 மற்றும் 2016 தேர்தல்களில் வெற்றிபெற்று, சிவகாசி தொகுதியின் 11-வது  எம்.எல்.ஏ. ஆனார்  கே.டி.ராஜேந்திரபாலாஜி.  இதற்கு முன் சிவகாசியில் தேர்ந்தெடுக்கப்பட்ட  எம்.எல்.ஏ.க்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இவருக்கு மட்டுமே உண்டு. தொடர்ந்து இரண்டு தடவை, தமிழக  அமைச்சரவையிலும் நீடிக்கிறார். 

 தொகுதி பக்கம் தலைகாட்டாத  எம்.எல்.ஏ.க்கள்,  ‘சீன்’ போடும் எம்.எல்.ஏ.க்கள்,  ஏனோதானோ  அமைச்சர்கள் பலரை தமிழகம்  கண்டிருக்கிறது.  கே.டி.ராஜேந்திரபாலாஜி அந்த ரகமல்ல. விருதுநகர் மாவட்ட அதிமுக  செயலாளராகவும் இருப்பதால்,  இந்த மாவட்டத்தின் அனைத்து  தொதிகளிலும் அவர் கால் பதிக்காத  இடமே இல்லை. காலில் சக்கரம் மாட்டாத குறைதான்!  அந்த அளவுக்கு, மாவட்டம் முழுவதும் பயணித்து,  சுறுசுறுப்பாக  இயங்கி வருபவர்.

 திருமணம் செய்து கொள்ளாததால்,  சொந்த வாழ்க்கை என்பதே இல்லாமல், முழுநேரமும் தன்னைப்  பொது  வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொள்ள,  இவரால் மட்டுமே முடிகிறது.‘எதுவந்தபோதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்’  என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  பாடிய வரிகளையே, தனது லட்சியமாகக் கொண்டு வாழ்பவர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி என்பது,  அவரை அறிந்தவர்களுக்கு தெரியும்.நாளை யார் யாருக்கு நிதி உதவி  செய்யலாம்’ என்று முதல் நாளே பட்டியல் தயார் செய்துவிடுவார். மருத்துவம்,  கல்வி, வாழ்வாதாரம் என  நலிந்தோருக்கு என்ன தேவையோ,  அதைத் தெரிந்துகொண்டு,  தேடித்தேடி உதவி செய்வதை வழக்கமாக  வைத்திருக்கிறார். ஏழைகளுக்கு உதவும்போது பெயரளவுக்கு கிள்ளிக் கொடுப்பவரல்ல; அள்ளிக் கொடுப்பவர். 

இதனை அறிந்துதான்,  திருத்தங்கல்லில் உள்ள அமைச்சர் வீட்டுக்கு தேவைகளோடும், மனுக்களோடும் வருகிறார்கள், அனேகம்பேர்.  வாக்குகளுக்காக உதவும் தேர்தல் அரசியலை ஒருபோதும் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்ததில்லைசென்னையிலிருந்து கன்னியாகுமரிவரை, பல தொகுதிகளில் இருந்தும் உதவி கேட்டு வருபவர்களுக்கு, ஜாதி, 

மதம் பார்க்காமல், கட்சி பாரபட்சம் இல்லாமல் உதவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஏழைத் தாயின் மகனாக, கூலித் தொழிலாளியாக, இதே சிவகாசியில் அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல! அதனால்தான், உதவி கேட்டு வருவோரின் மனநிலையை அறிந்து, அவரால் உதவ முடிகிறது. மனிதநேயத்தில் மட்டுமல்ல; ஆன்மிகத்திலும் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனித்துவம் மிக்கவர். அந்தக் காலத்தில் கோவில்களைக் கட்டியதெல்லாம் மன்னர்கள்தான். இவரோ, அமைச்சராக இருந்து பல  கோவில்களை கட்டியிருக்கிறார். 

இந்து  கோவில்களுக்கு மட்டுமல்ல.. கிறித்தவ தேவாலயங்களுக்கும், இஸ்லாமிய மசூதிகளுக்கும், சளைக்காமல் நிதியளிக்கிறார். இன்ஜினியரிங் காலேஜ்,  மெடிக்கல் காலேஜ்  ஆரம்பித்து, கோடானு கோடிகளைக் குவிக்கும் மாஜி அமைச்சர்கள் மலிந்து கிடக்கும் தமிழகத்தில், இவர் ஒரு தனிப்பிறவி! ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!’ என்ற பாடல் வரிகளுக்கு, புரட்சித்தலைவரே பொருத்தமானவர். 

அதேநேரத்தில்,  கே.டி.ராஜேந்திரபாலாஜி போன்ற வாரிசுகளை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும்,  நல்லபடியாக உருவாக்கி, தமிழகத்துக்கு தந்துள்ளனர்.லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களின் நலனுக்காக,   தனி நலவாரியம் அமைந்திட,  தனி 

 முயற்சி  எடுத்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அதனால்,  அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷமாக எங்கள் கண்ணுக்கு அவர் தெரிகிறார். இன்னும் இத்தொகுதிக்கான தேவைகள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனாலும், ஒரே தொகுதியில் தொடர்ந்து தான் மட்டுமே போட்டியிடுவது அழகல்ல என்று, 2016-ல் அளித்த வாக்குறுதியின் பிரகாரம், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு சிவகாசி தொகுதியை விட்டுக்கொடுத்திருக்கிறார். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று நாங்கள் கொண்டாடிய ராஜேந்திரபாலாஜி, தற்போது ‘உங்க வீட்டுப் பிள்ளை’ ஆகி,  ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.

 இத்தகைய மாமனிதரை அடையாளம்  கண்டபிறகு, விட்டுவிடாதீர்கள்.    கே.டி.ராஜேந்திரபாலாஜியை, ராஜபாளையம் தொகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது ராஜபாளையம் மக்கள் மனதில் பல்வேறு மாறுதல்களை உண்டாக்கியுள்ளது, வாக்கை வீணடிப்பதற்கு பதில் வெற்றி பெற கூடிய ராஜேந்திர பாலாஜிக்கு வாக்களித்து தொகுதியின் வளர்ச்சிக்கு உதவுவோம் என்று ராஜபாளையம் தொகுதி மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர்.