Cinema

வேதனையை சிரிப்பில் மறைத்து தன்னை குறித்த சர்ச்சை பற்றி பேசிய எஸ் எம் எஸ் நடிகை!

susi
susi

தந்தை மற்றும் தாய் இருவரும் துபாயில் செட்டில் ஆகி உள்ள நிலையில் துபாயில் பிறந்து பூனேவில் தனது நடிப்பிற்கான பட்டத்தை பெற்ற நடிகை அனுயா 2007 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழில் 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்த அனுயா பலரது கவனத்தையும் பெற்று அனுயாவின் நடிப்பிற்கு ஒரு சிறந்த படமாக அமைந்தது. அதற்குப் பிறகு அதே ஆண்டில் மதுரை சம்பவம் படத்தின் நடித்து குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றார் அதற்கு பிறகு நகரம் மறுபக்கம், நஞ்சுபுரம், நண்பன் என சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் திரை உலகில் காலடி எடுத்து வைத்த ஏழு ஆண்டுகளில் திரை உலகை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தமிழக மக்களின் நினைவிற்கு வந்தார் இருப்பினும் அவர் நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் மட்டுமே இன்னமும் பலரது ஃபேவரிட் படங்களில் ஒன்றாக உள்ளது. 


நடிப்பை விட்டு குறுகிய காலத்தில் விலகிய அனுயா பலவகையில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். அதிலும் குறிப்பாக அனுயாவிற்கு திருமணமாகி விட்டதாகவும் பல நடிகர்களுடன் அதாவது ஜீவா, சுந்தர் சி என அவர்களுடன் ரகசிய உறவில் இருப்பதாகவும் சினிமா வட்டாரம் மட்டுமின்றி சமூக வலைதளம் முழுவதும் கிசுகிசுக்கப்பட்டது. 

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை அனுயா, பூனாவில் நான் வசித்து வருகிறேன் துபாயில் எனது பெற்றோர்கள் இருக்கிறார்கள் பொறியியல் படிப்பில் தான் ஃபர்ஸ்ட் கிளாஸ் மாணவியாக தேர்ச்சி பெற்றதாகவும் நடிப்பு சம்பந்தமான பயிற்சி பெற்றதாகவும் கூறி விஜய் ஆண்டனி, ஜீவா மற்றும் சுந்தர் சி போன்ற நடிகர்களுடனும் இயக்குனர்களுடனும் நான் உறவில் இருப்பதாக பல செய்திகள் வெளி வருகிறது அவை அனைத்துமே பொய் பப்ளிசிட்டி ஸ்டான்ட் மட்டுமே என்று கூறியதோடு பிரதமர் மோடியை போன்று நானும் சிங்கிள் நாயகியாக வலம் வருகிறேன் என்று பேசி வீடியோ வெளியிட்டார். 

இருப்பினும் இவர் சினிமாவில் இருந்த காலத்தில் சுஜி லீக்சில் சிக்கி பெருமளவில் விமர்சிக்கப்பட்டார். அதாவது பிரபல பாடகியான சுசித்ரா பல நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவலை சமூக வலைதளத்தில் அப்பட்டமாக வெளியிட்டார். அதில் நடிகை அனுயாவின் புகைப்படமும் வெளியிடப்பட்டது. அதற்கான அந்த புகைப்படத்தை கலைநயத்துடன் பார்க்க வேண்டும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது தவறாக பார்த்தால் தவறாகத்தான் தெரியும் என்று சமூக வளைத்ததில் வைரலாக உலா வந்தது! அதனைத் தொடர்ந்து கவர்ச்சிகர புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பறக்க விட ஆரம்பித்தார் இதற்கு பிறகே அவருக்கு வழங்கப்பட்டு வந்த பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது! 

இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அனுயா சுச்சி லீக்ஸ் பிறகு நான் பெரும் ஏமாற்றத்தை அடைந்தேன்! அதற்குப் பிறகு நான் அதிலிருந்து வெளிவர ஆரம்பித்து விட்டேன் ஆனாலும் என்னை குறித்த சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் குறையவே இல்லை என்னை தவறாக பேசும் கருத்துக்களும் குறையவே இல்லை! நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை சமூக வலைதளத்தில் என்னை குறித்து வரும் அனைத்து தகவல்களுமே தவறானது! பல.கிசு கிசுக்களை பார்க்கும்போது சிரிப்பு வருகிறது ஆனால் மக்கள் அதனை உண்மை என்று நம்புகிறார்கள் அதற்காகவே நான் சமூக வலைதளத்தில் ஒரு அக்கவுண்ட்டை தொடங்கினேன் அப்பொழுதாவது மக்கள் என்னை குறித்து என்னிடம் கேட்பார்கள் அதற்கான உண்மையை நான் அவர்களும் கூறலாம் அல்லவா! அதனால் தான் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளேன் என்று கள்ளச் சிரிப்பை வெளிக்காட்டி வேதனையுடன் கூறியுள்ளார் நடிகை அனுயா!