Cinema

சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை சொல்ல முடியாது…... பிரபல இசையமைப்பாளர் பேட்டி!

sivakarthikeyan, d iman
sivakarthikeyan, d iman

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பது நடக்காது என்றும் இசையமைப்பாளர் டி.இமான் பெட்டியில் கூறியது தமிழ் சினிமா ரசிகர்களிடம் பாப்பரப்பை கிளப்பியுள்ளது.சிறுவயதிலேயே இசையமைக்க தமிழ் சினிமாவில் வந்தவர் டி.இமான் இவர் தமிழ் முன்னணி ஹீரோக்களுக்கு இயமைத்தவர் அவர். தற்போது இவர் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தபோது கூறியது: சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகம் ஒன்றை தனக்கு செய்துள்ளதாக கூறியுள்ளார். “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை. அடுத்த ஜென்மத்தில் அவர் ஹீரோவாக இருந்து நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம்.


நான் மிகவும் நல்ல மனிதர் வெளிப்படையான மனிதர் எனக்கு எப்படி துரோகம் இழைக்க முடியும் என்று கேட்கிறீர்கள், துரோகம் என்றால் அது தானே... துரோகம் அப்படித்தானே நடக்கும். அந்த துரோகத்தை நான் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். தொடர்ந்து பேசுகையில் எல்லா மனிதருக்கும் மன்னிப்பு என்பது நிச்சயம் இருக்கிறது. நாம் நிச்சயமாக மன்னிக்கலாம். ஆனால் அந்த விஷயங்களை மன்னித்து மறக்க முடியாது. அவருடன் இனி பயணிக்க முடியாது. உடைந்த கண்ணாடி இனி ஒட்டாது என்று பேசியது மக்களிடம் மண்டயயை பிய்த்துக் கொள்ள வைத்துள்ளது. ஒண்ணு மண்ணா பழகி வந்த இசையமைப்பாளருக்கு மறக்க முடியாத மன்னிக்க முடியாத துரோகத்தை சிவகார்த்திகேயன் செய்திருப்பதாக பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன், டி.இமான் இருவரும் இணைந்து மனங்கொத்தி பறவை படத்தில் தொடங்கிய நட்பு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை என பல படங்களில் இருவரும் இணைந்து பயணித்து தமிழ் சினிமாவுக்கு ஏகப்பட்ட தரமான பாடல்களை கொடுத்துள்ளனர்.

அப்படி இருக்கையில் சிவகார்த்திகேயன் குரோய்து வலைதளத்தில் இமான் தெரிவித்திருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை சோகத்தில் தள்ளப்பட்டுள்ளது. எதற்காக இப்படி பேசுகிறார் படத்தில் பணியாற்றும்போது எதாவது சம்பள பிரச்சனையா? அல்லது வேறு என்ன பண்ணிவிட்டார் என்று மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திள்ளது. இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”டி.இமான் என்ன சொல்ல வர்றாருன்னு புரியுதா? வலைப்பேச்சு-இந்த விஷயத்தை பலமுறை நாசுக்கா சொல்லியிருக்கு. இன்று அதையே தன் வாயால் உறுதி படுத்துகிறார் இமான். சில ஹீரோக்கள் நிஜ வாழ்வில் அக்மார்க் வில்லன்கள். அவ்வளவே!” இவரின் பதிவிற்கு கீழ் நெட்டிசன்கள் இமானின் திருமண விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்! அதனை தான் இமான் பேச முடியாமல் பேசுகிறார் என்று கமெண்டை தெரிவிக்கின்றனர்.