Politics

மோதல்களுக்கு காரணமே நீங்கள்தான்யா அதிரடியாக கருத்து தெரிவித்த ஷ்யாம் கிருஷ்ணசாமி!

Shyam Krishnasamy
Shyam Krishnasamy

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நாட்டின் பாதுகாப்பு, கலாச்சாரம் ஒருமைப்பாடு உள்ளிட்ட விஷயங்களில் எங்கு தவறு நடந்தாலும் அது அரசியல் ஆக்கப்பட்டாலும் முன்னின்று தனது கருத்தை பதிவு செய்வதில் முனைப்பு காட்டுபவர்.


நாட்டின் ஒற்றுமை குறித்து இதுவரை பல பேட்டிகளில் அவர் வலியுறுத்தி வந்து இருக்கிறார், சமீபத்தில் புர்கா விஷயம் கர்நாடக மாநிலத்தில் புயலை கிளப்ப, ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் மத பாகுபாடு இல்லாமல் சீருடையில் வருவது அவசியம் எனவும் வலியுறுத்தி தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார், அந்த வகையில் அவரது மகனும் புதிய தமிழகம் கட்சியின் எதிர்காலமும் ஆகிய ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்ய கூடியவர்.


குறிப்பாக திராவிடம் என்ற பெயரில் தற்போதைய தமிழக அரசியலில் நடக்கும் மாற்றங்கள் குறித்து  தனது கருத்துக்களை ஆழமாக வைத்துள்ளார் ஷ்யாம் கிருஷ்ணசாமி அது பின்வருமாறு :-

மத நல்லிணக்கம், உரிமைகள் என மத அடையாளங்களை வளர்த்து மத பிளவுகளை விரிவுப்படுத்துவது, சமூகநீதி என்ற பெயரில் சாதிகளுக்கு கொம்பு சீவி விட்டு, சாதி கலவரத்தில் கொண்டு நிறுத்துவது, பின்ன பாதிக்கப்பட்டவர்களுக்கு திராவிடம் துணை என்று நாடகமாடுவது.

மோதல்களுக்கு காரணமே நீங்கதான்யா!வயிற்று பிழைப்புக்காக சமூகநீதி பேசினாலும் வக்கிர திராவிட பண்ணையார் புத்தி போயிடுமா என்ன என வெளுத்து எடுத்து இருக்கிறார்.இதனை அவரது முகநூல் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார் ஷ்யாம்.

More Watch Videos