Cinema

சூப்பர் ஸ்டாருடன் மோதும் சிவர்கார்த்திகேயேன்... வெற்றி யாருக்கு?

cinema
cinema

இந்த ஆண்டு தொடக்கத்தில் குறிப்பாக பொங்கலன்று இரண்டு மெகா ஹீட் ஹீரோக்களின் படங்கள் வெளியாகி வசூலை குவித்தனர். அந்த வகையில் தளபதி விஜயின் வாரிசு படமும், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் துணிவு படமும் இந்த ஆண்டின் ஜனவரியில் திரைக்கு வந்தன. அதில் இரு படங்களும் வசூல் ரீதியாக நல்ல கலக்ஸனை தயாரிப்பாளர்கள் அள்ளினர். வாரிசு படம் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது. எப்போதும் சொல்வது போல் தளபதி மட்டும் ஏன் விடுமுறை நாட்களை குறி வைத்து படத்தை வெளியிடுகிறார்? என ஒரு தரப்பு கேள்வி எழுப்ப மறு தரப்பு விளக்கம் அளிக்கும் வகையில் படம் நல்லா இல்லை என்றால் போட்ட முதலீட்டை எடுக்க வேண்டி இப்படி பண்டிகை தினத்தில் வெளியிடுகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படத்தில் துணிவு படம் குடும்பங்கள், ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி தீர்த்தனர். வாரிசு படத்தை ரசிகர்கள் கொண்டாட மறுத்த நிலையில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக முடிவு எடுத்தனர். எந்த ஒரு படம் கலவையான விமர்சனம் பெறுகிறதோ அதனை குடும்பங்கள் கொண்டாடும் படமாக குடும்பத்தின் தலை மீது ஏற்றி வைத்து விடுவது வழக்கமாகி விட்டது.


அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இன்னும் இரண்டு மாத காலமே உள்ள நிலையில் விடுமுறை தொடர்ந்து வருவதால் வசூலை குவிக்க தமிழ் திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் மற்றும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நடித்துள்ள படம் "லால் சலாம்" கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இன்றுடன் நிறைவு பெற்று விட்டதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்து, படம் 2024 பொங்கலில் திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர் படக்குழு.சிவகார்த்திகேயன் நடித்த படம் "அயலான்" இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் அறிவித்திருந்த நிலையில், இந்த படமானது ஏலியன்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் வேலை முடிக்காமல் இருப்பதால் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த படம் பல முறை ரிலீசுக்கு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.  இதன் மூலம் இரு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.

இது போலவே, இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் "வணங்கான்" இந்த படத்தில் முன்னதாக சூர்யா நடிக்க ஒப்பந்தமான நிலையில், படத்தின் காட்சிகள் எடுக்கும்போது நடிகர் சூர்யாவுக்கும் படக்குழுவினர்க்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியாகினார். அவருக்கு பதிலாக அருண் விஜய் ஒப்பந்தமாகி படம் எடுக்கப்பட்டு முடிவு பெற்ற நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுந்தர்.சி இயக்கி நடித்த படம் "அரண்மனை 4" இதுவும் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியிடுவது குறித்து நேற்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். முன்னதாக அரண்மனை 3 பாகமும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரிலர் காட்சிகள் நிறைந்த அரண்மனை படத்தினை திரையில் கான ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இதுவரை நான்கு படங்கள் வெளியாவது உறுதியான நிலையில் போக போக தான் தெரியவரும் பொங்கலுக்கு எந்த படம் திரைக்கு வரும் ,பொங்கல் முடிந்து எந்த படம் திரைக்கு வரும் என்று காத்திருப்போம்....