Tamilnadu

#BREAKING லாவண்யா விவகாரத்தில் காட்சிகள் மாறுகின்றன.. அதிரடி திருப்பம்!

Lavanya
Lavanya

மத மாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யா விவகாரம் மெல்ல மெல்ல புறக்கணிக்கப்பட்ட நிலையில் பாஜகவின் கடும் அழுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது காட்சிகள் மாற தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன் இது குறித்து அவர் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு :- 


மாணவி லாவண்யாவினை மதமாற வலியுறுத்தி அவளை தற்கொலைக்கு தூண்டிய குற்றசாட்டில் பாஜகவின் வலுவான எதிர்ப்பால் காட்சிகள் மாறுகின்றன‌, ரோட்டோரம் ஏதோ போல கடந்து சென்றுவிடலாம் ஆட்சியும் ஊடகமும் நம்மிடம் உண்டு என நம்பியிருந்த மதவாத சக்திகளுக்கு எதிர்ப்பு பெருகுகின்றது.

கட்சி தலைவர்களின் அறிக்கையினை தொடர்ந்து தமிழகத்தில் பெருகும் எதிர்ப்பை தொடர்ந்து நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறபிக்கும் வாய்ப்பு வந்தாயிற்று, அதிகார பீடம் சிலுவையில் அறையபட்ட கோலத்தில் இருப்பதால் அவர்களிடமிருந்து ஏதும் பதில்வராது அவர்கள் நிலை அப்படி எளிதில் மறையவிருந்த இந்த சதி விவகாரம்  பூதாகரமானதில்.,

முழு பங்கும் தமிழக பாஜகவுக்கும் அதன் தலைவர் அண்ணாமலையினையே சாரும்.விரைவில் மாணவிக்கு நீதிகிடைக்கும் அவளின் சாவுக்கான அர்த்தம் வெளிவரும் என்ற நம்பிக்கை ஒளி மெல்ல துலங்குகின்றது என குறிப்பிட்டுள்ளார்ஸ்டான்லி ராஜன்.

அண்ணாமலை லாவண்யாவிற்கு நீதி கேட்டு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் இது தொடக்கம்தான் எனவும் தமிழகத்தில் அனைத்து ஊர்களுக்கும் பாஜக சென்று இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க செய்வோம் என பேசியது குறிப்பிடத்தக்கது.