Cinema

வேடிக்கை பார்க்கும் "பொய் பீம் சூர்யா, வெளுத்து எடுத்த நடிகை!

Pranitha subhash
Pranitha subhash

மத்திய அரசு கல்வியில் ஏதேனும் சீர் திருத்தம் கொண்டுவந்தால் முதல் நபராக ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது சூர்யா குடும்பத்தின் அன்றாட நிகழ்வு,மும்மொழி கொள்கை குறித்தும் நீட் தேர்வு குறித்தும் சூர்யா பேசிய கருத்துக்கள் இணையத்தில் விவாதத்தை உண்டாக்கின மேலும் தான் அறக்கட்டளை மூலம் பள்ளி மாணவர்களுக்கு உதவுவதாக சூர்யா குடும்பம் தெரிவித்து வருகிறது.


ஜோதிகா கோவில் கட்டுவதற்கு பதில் பள்ளி கூடம் கட்டலாம் என தஞ்சை பெரிய கோவிலை உருவகம் செய்து பேசியது கடும் சர்ச்சையை உண்டாக்கியது, இந்த சூழலில் பள்ளி மாணவியானா லாவண்யா மதமாற்ற கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டது கடும் அதிர்வலைகளை நாடு முழுவதும் உண்டாக்கியுள்ளது, இந்த சூழலில் பள்ளி மாணவி ஒருவர் வீடியோ வெளியிட்டு தனது சாவிற்கு மதமாற்ற கொடுமைதான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.


ஆனால் இது வரை சூர்யா இது குறித்து எந்தவித கருத்தும் பதிவு செய்யவில்லை மத்திய அரசு ஏதேனும் சட்டம் கொண்டுவந்தால் மட்டும் வாய் திறக்கும் சூர்யா, சொந்த மாநிலத்தில் பள்ளி சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் வாய் திறக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது, இந்த சூழலில் சூர்யாவுடன் தமிழ் திரைப்படத்தில் இணைந்து நடத்த நடிகை பிரனிதா சுபாஷ் லாவண்யா தற்கொலை விவாகரத்தில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

அது பின்வருமாறு :- சிறுவயது பள்ளி குழந்தைகள் மீது மதக் கோட்பாடுகள் திணிக்கப்படுவதைப் பார்ப்பது மனதைக் கனக்கச் செய்கிறது, இந்த வழக்கில் விரைவில் நீதி கிடைக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார் மேலும் தான் லாவண்யாவிற்கு நீதி கிடைக்க உடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பிரனிதா தமிழக மாணவி தற்கொலை விவாகரத்தில் கருத்து தெரிவித்து இருக்கும் சூழலில் சூர்யா போன்றோர் வாய் மூடி மவுனமாக இருப்பது.. சூர்யா ஜெய்பீமல்ல பொய் பீம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அனிதா தற்கொலை விவாகரத்தில் விடிய விடிய விவாதம் நடத்திய ஊடகங்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் அதே அரியலூரை சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா விவாகரத்தில் வேடிக்கை பார்ப்பதில் இருந்தே சூர்யா போன்ற பலரின் இரட்டை முகத்தை புரிந்து கொள்ளலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.