Cinema

ராஜ்கிரண் அவரின் மாமியாருக்காக செய்த விஷயம்!!! ச்ச!! என்ன மனுசன்யா!!!

Rajkiran
Rajkiran

1988 ஆம் ஆண்டில் ராமராஜன் நடிப்பில் உருவான ராசாவே உன்னை நம்பி என்னும் திரைப்படத்தை முதல் முதலில் தயாரித்து சினிமா துறையில் ஒரு தயாரிப்பாளராக அறிமுகமானவர்தான் ராஜ்கிரண்!! அதன் பிறகு சிராஜ் இயக்கத்தில் என்ன பெத்த ராசா என்னும் திரைப்படத்தில் ராஜ்கிரனே தயாரித்து அதில் நடிக்கவும் செய்தார். இதுதான் அவர் ஹீரோவாக நடித்த முதல் படம். இந்தத் திரைப்படத்திலேயே இவர் அதிக அளவில் ரசிகர்களை பெற்று தமிழ் சினிமா உலகில் பெரும் வரவேற்பையும் பெற்ற ஹீரோவாக மாறிவிட்டார். அவரின் முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்று அந்த காலகட்டத்திலேயே ஒரு சிறந்த நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார்!!


முதல் திரைப்படத்தில் இவர் சூப்பராக நடித்து அதிக அளவில் ரசிகர்களை பெற்றிருந்ததால் அதற்கு அடுத்து தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அந்த வண்ணமே இருந்து வந்தது. அதன் பிறகு அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற திரைப்படங்களில் தயாரித்து அதில் இவரே ஹீரோவாகவும் நடித்து வந்தார். இந்தத் திரைப்படங்களும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்து நல்ல ஒரு பெயரினை சம்பாதித்து கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி போன்ற திரைப்படங்களுக்கு என்றும் இளைஞர்கள் கூட ரசிகர்களாக இருந்து வருகின்றன. இதனை தொடர்ந்து மஞ்சப்பை, பவர் பாண்டி, சண்டக்கோழி 2 என்னும் திரைப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து அந்தத் திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.

இது போன்ற பல வெற்றிகளை தொடர்ந்து சந்தித்து வந்த ராஜ்கிரன் அவரின் உடன் இருப்பவர்களுக்கு அதிக அளவில் உதவும் குணம் கொண்டவராக இருந்துள்ளாராம். தன்னுடன் இருப்பவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை செய்து கொடுத்து அவர்களை அழகு பார்ப்பது இவரின் ஒரு குணமாகவே இருந்துள்ளது.  ஆனால் ஒரு காலகட்டத்தில் இவர் கஷ்டப்படும் பொழுது இவருடன் யாருமே இருக்கவே இல்லை என்றும், அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி மட்டுமே உடன் இருந்ததாகவும் சமீபத்தில் அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்று அதற்கு கூறியுள்ளார். 

ராஜ்கிரன் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் கூட இவர் காதலுக்கு திருமணம் செய்து கொண்ட பெண் இந்து தான்!! ஆனால் திருமணத்திற்கு பின் அவரின் மனைவி இஸ்லாமியத்திற்கு மாறி எனது பெயரையும் கதீஜா நாச்சியார் என்று மாற்றிக் கொண்டுள்ளார். ராஜ்கிரன் இதுவரை குடும்பத்துடன் எந்த ஒரு பேட்டியிலும் கலந்து கொள்ளாத நிலையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் ஒரு பேட்டி அளித்துள்ளார். அது 75 வயதாகியும் தன் மனைவியின் மீது உள்ள அன்பு குறையாமல் இருப்பதை பற்றியும், தன் பிள்ளைகளைப் பற்றியும், அவரின் மகளின் வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து கூறினார். இதனை தொடர்ந்து தனது மனைவியின் தாயாருக்கு ராஜ்கிரண்  செய்த ஒரு விஷயத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்!! அது என்னவென்றால்!!!

ராஜ்கிரனின் மனைவியான கதீஜா நாச்சியாரின் தாய்க்கு கிட்டத்தட்ட நூறு வயதிற்கு மேல் இருக்கும் என்றும், அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் தீவிரமான கடவுள் பக்தி உடையவர் என்றும் அதற்காக தற்போது வயசான நிலையில் கோவில்களுக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே ஒரு பிரம்மாண்டமான கோவில் ஒன்றை கட்டி கொடுத்துள்ளார் என்று பேட்டியில் கூறியுள்ளார். வயதான மாமியாருக்காக ராஜ்கிரன் செய்த விஷயம் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் வாழ்த்தியுள்ளது. தற்போது ராஜ்கிரண் நடித்த பேட்டி  குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.