Cinema

அவசியமே கிடையாது...! ஒரே வரியில் விமர்சித்தவர்களை செய்த சமந்தா!

SAMANTHA
SAMANTHA

 தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக உள்ள சமந்தா தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் ரீமெக் தெலுங்கில் வெளியாகியது அதில் கதாநாயக நடித்து திரை உலகில் அறிமுகமானார். மேலும் அதே படம் தமிழில் வெளியான பொழுது துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி, பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் என தொடர்ச்சியாக அவன் அடித்த பல படங்கள் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி விஜய் மற்றும் சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து நல்ல வரவேற்பை தமிழில் பெற்று வந்தார். அதே சமயத்தில் தெலுங்கிலும் முக்கிய நடிகர்களுடன் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் கலக்கி வந்தார் சமந்தா அப்பொழுது அவரது நண்பரும் நீண்ட நாள் காதலருமான நாகார்ஜுனனின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார், 


இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது அது குறித்து புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளத்தில் இன்றும் பலரால் தேடிப் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிக்க மாட்டாரா என்று கேள்விகள் பலமாக இருந்து வந்த நிலையில் சீமா ராஜா, யு டர்ன், சூப்பர் டீலக்ஸ், இரும்புத்திரை, தெறி மற்றும் 24 என தொடர்ச்சியாக நடித்து வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமண வாழ்க்கைக்கு ஒரு முற்றுக் கொடுத்துவிட்டு நாக சைத்தன்யாவும் சமந்தாவும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர் இது சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. அதற்கான காரணம் இதுவரையிலும் பொதுவெளியில் கூறப்படவில்லை இருப்பினும் அது அவர்களது முடிவு என்று தற்போது இருவரும் படங்களில் தங்களது கவனங்களை செலுத்தி வருகின்றனர். அப்படி ஒரு நீண்ட இடைவெளி எடுத்து ஒரு கம்பேக் கொடுத்த சமந்தா தமிழ், தெலுங்கு ஹிந்தி பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடல் நடிகையாக மீண்டும் என்ட்ரி கொடுத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியையும் கொடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல், குஷி என முக்கிய படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு மயோடிசிஸ் என்ற தோல் நோயும் ஏற்பட்டுள்ளது.அதிலிருந்து மிகவும் தனது உடல் பலனை இழந்து மிகவும் சோர்வாக காணப்பட்டிருக்கும் சமந்தா தொழுநோயிலிருந்து தன்னை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் தற்போது பல சிகிச்சைகளின் பெற்று வருகிறார். அதனால் படங்கள் அனைத்தையும் ஒத்தி வைத்து விட்டு தனது உடல் மீது அதிக கவனம் செலுத்தி சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார், அதற்காக பல வெளிநாடுகளுக்கு சென்று அங்கு தான் சிகிச்சை அளிக்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமந்தா குறித்த ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு பிறகு நீக்கப்பட்டதாகவும் அந்த புகைப்படம் சமந்தாவின் நிர்வாண படம் என்றும் பல வதந்திகள் மற்றும் விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்ட வந்தது. அதற்கு சமந்தாவின் ரசிகர்கள் பலர் மாபிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று பதிலடி கொடுத்து வந்த நிலையில் அதுவும் தற்போது உறுதியாகியுள்ளது.

அதாவது இதற்கு முன்பு நடிகை ராஷ்மிகா மற்றும் காஜல், பிரியங்கா சோப்ரா என பலருக்கும் நேர்ந்தது போலவே வீனஸ் வளன்சியா என்ற ஆபாச பட நடிகையின் முகத்தை எடுத்து விட்டு சமந்தாவின் முகத்தை வைத்து தான் சமந்தாவிற்கும் நேர்ந்துள்ளது.மேலும் இதற்கு சமந்தா, நான் யாருக்கு நிரூபிக்கணும்னு அவசியமில்லை என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானால் போதும் அது மாபிங் செய்யப்பட்டதா உண்மையானதா போலியானதா என்பதையும் தெரிந்து கொள்ளாமல் ஏகப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கும் சில விமர்சன தாரர்களுக்கு சமந்தா ஒரே வார்த்தைகள் பதிலடி கொடுத்துள்ளார். இது சமூக வலைதளம் முழுவதும் பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது.