Cinema

ரஜினியின் கூலி இசை சர்ச்சை... இளையராஜா கிளப்புன காரணமே வேறயாமே....?

RAJINIKANTH , ILAYARAJA
RAJINIKANTH , ILAYARAJA

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று சொன்னாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இவருடைய ரசிகர்களாக தான் இருந்து வருகின்றனர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து இன்று சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஒரு பிரபல நடிகராகவே இருந்து வருகிறார். மேலும் இதுவரை 170 திரைப்படங்களுக்கு மேல் நடித்து அதில் அதிக அளவில் கிட்டும் கொடுத்து வந்துள்ளார். 90ஸ் கிட்ஸ் முதல் தற்போது உள்ள ஓகே கிட்ஸ் வரை இவருக்கு உள்ள ரசிகர்களின் கூட்டம் என்றுமே கட்டில் அடங்காமல் தான் இருந்து வருகிறது. அவ்வபோது சில திரைப்படங்களில் சின்ன சின்ன சரிவுகளை எதிர்கொண்டு வந்தாலும் கூட அதன் பிறகு திருப்பியும் கம்பேக் கொடுத்து அடுத்த திரைப்படத்தில் சூப்பர் ஹிட் கொடுத்து விடுகிறார். எனவே எந்தவித ஏமாற்றமும் இன்றி ரசிகர்களும் இவரின் திரைப்படத்தை பார்த்து சொல்கின்றனர்.


கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் கூட சிறிது காலத்திற்குப் பிறகு இவரின் திரைப்படத்தில் மிகவும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் ஒன்றாக இருந்த வந்தது. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க போகும் திரைப்படத்தின் அப்டேட் வந்திருந்தது. ஆனால் அந்த திரைப்படம் தற்போது ஒரு சர்ச்சையில் மாட்டி உள்ளது!! மேலும் அந்த சர்ச்சையில் இசையமைப்பாளர் இளையராஜா ஈடுபட்டுள்ளார்!! அது என்ன சர்ச்சை?? ஏன் அதில் இளையராஜா ஈடுபட்டார் என்பதை பற்றி விரிவாக காணலாம்!!  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது ரஜினிகாந்த் நடித்த வரும் திரைப்படம் தான் கூலி!!! இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் அந்த திரைப்படத்தின் 3 நிமிடங்கள் கொண்ட முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

அந்த முன்னோட்ட வீடியோவில் இளையராஜா இசையமைத்திருந்த "வா வா பக்கம் வா" என்ற பாடலின் இசை இருந்ததாகவும், அந்த இசையை பயன்படுத்துவதற்கு தன்னிடம்  டீசரிலிருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இளையராஜா சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.மேலும் டீசரிலிருந்து இந்த இசையை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.ஏற்கனவே இளையராஜா கவிஞர் வைரமுத்து உடன் ஏற்பட்ட பிரச்சனை ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ரஜினிகாந்த் திரைப்படத்திலும் ஒன்று நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் இதற்கு முன்பு முள்ளும் மலரும், நல்லவனுக்கு நல்லவன், தளபதி போன்ற பல திரைப்படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றி அந்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகவும் வெற்றி பெற்று வந்ததும் நாம் அனைவருக்கும் தெரிந்தது.

இப்படி இருவரும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் எடுக்கப் போகும் கூலி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மீது இளையராஜா இப்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளதை பார்க்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இது தற்போது திரையுலகத்தில் உள்ளவர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதன் பின்னணியை சில சினிமா விமர்சகர்களிடம் விசாரித்த சமயம், ரஜினி மீது இளையராஜாவுக்கு எந்த கோபமும் இல்லை அவர்கள் இருவரும் நண்பர்கள், ஆனால் சன் பிச்சர்ஸ் இதனை முறையாக இளையராஜாவிடம் அனுமதி வாங்கி செய்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை அதுதான் இசைஞானிக்கு கோபம் என கூறுகிறார்கள்...ஆனால் இந்த நோட்டீஸ் குறித்து சன் பிக்சர்ஸ் இதுவரை எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் இருந்து வருகிறது. மேலும் இதற்கு சன் பிக்சர்ஸ் என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!!