
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீட்டின் மாதிரி கோயில்களில் நான்காம் நாளாக திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ஆம் தேதி மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோயில்களின் மாதிரி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் அறுபடை வீடுகளும் தரிசிக்கும் பக்கதர்களுக்கு கிடைத்துள்ளதால் மதுரையை சுற்றியுள்ள பகுதி மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.இது திமுக தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது,குறிப்பாக முருக பகதர்கள் மாநாடு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக தான் முருக பக்த்ர்கள் மாநாட்டிற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது திமுக அரசு. மேலும் திமுக அமைச்சர்கள் முருக பக்தர்கள் மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முருகபக்தர்கள் மாநாட்டுக்கு வருவார்கள் என உளவுத்துறை ரிபோர்ட் கொடுத்துள்ளது. இந்த நிலையில் தான் திருமா செய்த காரியம் இந்து மக்களிடையே பெரும் கோவத்தை கிளப்பியுள்ளது திமுகவுக்கு சிக்கலை உண்டு பண்ணியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். மேலும், மலைக்கு செல்லும் வழியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார்
திருப்பரங்குன்றம் கோவிலில் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு மரியாதை செய்து நெற்றியில் விபூதியிடப்பட்டது. அவருடன் கட்சியினருக்கும் விபூதி பூசப்பட்டது.தரிசனம் முடித்து திரும்பும் நிலையில், கோவிலுக்குள் வந்த ஒரு தம்பதி, திருமாவளவனை பார்த்ததும் அவருடன் செல்பி எடுக்க விரும்பினர்.அவர்களின் செல்போனை வாங்கிய திருமாவளவன், தன் நெற்றியில் உள்ள விபூதியை அழித்துவிட்டு, அத்தம்பதியுடன் சேர்ந்து, அவரே செல்பி எடுத்துக் கொடுத்தார். இதற்கிடையே, விபூதியை அழித்தது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.
மேலும் திமுக என்றாலே இந்துவிரோத கட்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத முதல்வர் இந்து மந்திரிங்கள் குறித்து விமர்சனம், சனதானம் குறித்து விமர்சனம், விநாயகரை களிமண் என விமர்சனம் இது போன்று தொடர்நது இந்துமக்களை சிறுமைபடுத்தி வருகிறது திமுக அரசு. தேர்தல் வரும் சயமயத்தில் திருமா செய்தது திமுகவை கடுப்பேற்றியுள்ளது. மேலும் திமுக அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லை என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது . அதை சரி செய்ய முடியாமல் திணறி வருகிறது. திமுகவின் தொடர் வெற்றிக்கு காரணம் உறுதியான அதன் கூட்டணி என கூறியுள்ளது வருகிறது. அதே சமயம் திமுக கூட்டணி வரும் தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல வேண்டுமென்றால் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று அந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளது ஆனால் தற்போது திருமாவளவன் திருநீறை அளித்து திமுக தலையில் இடியை இறக்கியுள்ளார். மேலும் முருக பக்தர்கள் மாநாட்டில் பக்த்ர்கள் அதிக அளவில் கலந்து கொண்டால் திமுகவுக்கு 2026ல் மிகப்பெரிய அடி இருக்கும் அதே போல் 2031 ல் திமுக பல துண்டுகளாக உடையும் எனவும் ரிப்போர்ட் கூறியுள்ளது