
பல ஆண்டுகளாக, இந்தியா, கனடா நட்பு நாடுகளாக இருந்து வந்தது. ஆனால், காலிஸ்தான் நிர்வாகி நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியா மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்ட, இந்த உறவில் விரிசல் விழுந்தது.தற்போது கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) வரை, கனடாவில் ஜி7 உச்சி மாநாடு நடந்தது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்தாலிய பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டிற்கு கனடா சென்ற மோடியை, கனடா பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசினார். இதில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு புதுப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் செயல்படுகிறது. அது கனடாவை தங்களது இயக்கத்தின் வளர்ச்சிக்காக, நிதி உதவி பெறும் இடமாகவும், இந்தியாவில் வன்முறைகளை கிளப்ப திட்டமிடும் இடமாகவும் பயன்படுத்தி வருகிறது. கனடாவில் சிறிய அளவில் தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இருக்கின்றனர்.மேலும், கனடாவின் தேர்தலில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலையீடு இருந்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாக கனடா பேசியது அமெரிக்காவால் ஏற்றுகொள்ள முடியவில்லை ஜி-7 மாநாட்டில் ஆரம்ப நிலையிலேயே டொனால்ட் ட்ரம்ப் மாநாட்டில் இருந்து விலகி அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.
இதற்கு காரணம் மோடி தான்.ஆரம்பத் தில் மோடி ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ளும் நிலையில் இல்லை.ஆனாலும் கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியின் சிறப்பு அழைப்பை ஏற்று கன டாவிற்கு சென்றார் மோடி. மேமோடியை கனடாவில் நேரில் எதிர் கொள்ள முடியாமல் டிரம்ப் அமெரிக்காவிற்கு ஓடி விட்டார். எந்த ஒரு விசயத்திலும் தெளிவானஅணுகுமுறை இல்லை. முன்னுக்கு பின் முரனாகவே இருந்து வருகிறார்டிரம்ப் .ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவேன்என்று களம் இறங்கினார்.ஆனால் போர் தீவிரமானது. ஈரான் இஸ்ரேல் மோதலை நிறுத்த ஈரானுடன் பேச்சு வார்த் தையை நடத்தினார்.ஆனால் இப்பொழு து அமெரிக்காவே ஈரானை தாக்கும் என்கிறார்.தற்போது அதிலிருந்து பின்வாங்குகிறார். திடீரென பாகிஸ்தான் புகழ் படுகிறார்
யார் என்ன சொன்னாலும் கேட்டு ஒரு முடிவை எடுப்பதும் பிறகு வேறு ஒருவர்பேச்சை கேட்டு அதனை மாற்றிக்கொள்வதும் ஒரு சிறந்த தலைவருக்கு அடையாளமாக இருக்க முடியாது. .இப்பொழுது இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு ஆரம்பத்தில் இந்திய ஆதரவாளராக இருந்த ட்ரம்ப் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் திய பிறகு இந்தியாவிற்கு எதிராக திரும்பி விட்டார்.இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் தயாரிப்பான எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா. இதற்கிடையே சீன அமெரிக்க துருக்கி என மூன்று நாடுகளின் ட்ரோன்கள் விமானிகள் ஏவுகணைகளை வீழ்த்தியது இந்தியா . இது உலக நாடுகள் மத்தியில் பெரும் வியப்பை உண்டாக்கியது. துருக்கி, சீனா, அமெரிக்காவுக்கு எரிச்சலை உண்டாக்கியது. இதற்கிடைய தான் அமெரிக்க இந்தியாவுக்கு எதிராக திரும்ப ஆரம்பித்துள்ளது..
கனடா ஜி-7 மாநாட்டில் மோடியை எதிர்கொள்ள விரும்பாத ட்ரம்ப் அமெரிக்காவிற்கு போய் அங்கிருந்து மோடியிடம் பேசி வாங்க மோடி அமெரிக்காவில் வைத்து பேசுவோம் என்று கூற பதிலுக்கு மோடி உதாசீனப்படுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.