
இந்து முன்னணி சாா்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தா்கள் மாநாடு பல்வேறு கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. பறை இசை, மேளதாளம் முழங்க கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடானது இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் கண்காட்சியை லட்சக்கணக்கான இந்து மக்கள் பார்வையிட்டனர்.
இந்த மாநாட்டில் ஆதீன குரு மகா சந்நிதானங்கள், ஆன்மிகப் பெரியோர், பாஜக, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், இந்து முன்னணி நிா்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மாநாடு தொடங்கும் முன் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாநாடு தொடங்கிய வேளையில் லேசான மழைத்தூறலுடன் ஆரம்பித்தது மாநாடு வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து மாநாட்டில் அமரும் வகையில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 70 பகுதிகள் பிரிக்கப்பட்டு அதில் ஒவ்வொரு பகுதியிலும் 3 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதிக்கம் இடையேயும் 12 அடியிலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், பக்தர்கள் வசதிக்காக தற்காலிக குடிநீர் தொட்டி, எல்இடி திரைகள் அமைக்கப்பட்டன பல கிலோ மீட்டர்களுக்கு வாகனங்கள் அணி வகுத்தது. போதிய பாதுகாப்பு அளிக்காததால் மாநாட்டுக்கு உள்ளே வர முடியாமல் பல பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் அணிவகுத்து நின்றார்கள்.
மேலும் மாநாட்டையொட்டி, திருப்பரங்குன்றம் மலை, நிற்கும் நிலையில் சுவாமி முருகன் போன்று பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. மேடையின் வலது பக்கத்தில் ஆதீன குருமகா சந்நிதானங்கள், ஆன்மிகப் பெரியவா்கள் அமருவதற்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு முன்னர் கலை நிகழ்ச்சிகளுக்கான மேடையும் அமைக்கப்பட்டு மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போல் இருந்தது முருகர் பக்தர்கள் மாநாடு.
மதுரை எப்போதும் திருப்பம் தருமிடம், வரலாற்றில் பெரும் இந்து எழுச்சியெல்லாம் அங்கிருந்தான் வரும், காசி முதல் பல தங்கள் மதுரையில் இருந்தே மீட்கபட்டது, திருவிளையாடல் காலம் முதல் மொகலாயர் காலத்தில் குமரகுருபரர் காலம் வரை அது மெய்பிக்கபட்டதுஇப்போது அதே பெரும் திருப்பம் மதுரையில் இருந்து மீண்டும் எழுகின்றது.லட்சணக்கான மக்களை கூட்டி கந்த சஷ்டி கவசம் பாடவேண்டும் என்பது இதுவரை செய்திராத பெரும் முயற்சியை செய்த பாஜகவுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்துமக்களையும் இந்து கடவுள்களையும் தொடர்ந்து விமர்சித்து வந்த திராவிட கூட்டங்களுக்கு எதிராக தைரியமாக இறங்கியுள்ளது இந்துமுன்னணி.
முருக பக்தர்கள் மாநாடு மூலம் தமிழகத்திலும் ஹிந்து வாக்குவங்கி உருவாகி உள்ளது என்பதை நிரூபித்துள்ளது என்பது உண்மைதான்.உளவுத்துறையும் முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுத்த ரிப்போர்ட்டில் 1 லட்சம் பேர் தான் எதிர்பார்த்தது ஆனால் இந்த 4 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த அறுபடை வீடு தரிசனம் மற்றும் மாநாட்டிற்கு வந்து சென்றுள்ளார்கள். இதற்கு காரணம் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் திமுக அமைச்சர்கள் இந்து கடவுள் குறித்து விமர்சனம் செய்தது தான். இதே நிலை நீடித்தால் 2026 ல் பல தொகுதிகளில் டெபாசிட் காலியாகும் என ரிப்போர்ட் கொடுத்துள்ளார்கள. இந்த ரிப்போர்ட்டால் திமுக தலைகள் பீதியில் உறைந்திருக்கிறார்கள்
மேலும் திமுக அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலின் , உதயநிதி திருமா, போன்ற தலைவர்கள் இந்து மதம் குறித்தும் கோவில்கள் மற்றும் கடவுள்கள் குறித்து பேசிய வீடியோக்களை சேகரித்து வருகிறார்கள். வழக்குகள் பதியவும் முடிவெடுத்து உள்ளார்கள். இந்த விஷயத்தில் தீவிரமாக களமிறங்க உள்ளார்கள் இந்து அமைப்புகள். உதயநிதி முதல் ஆ.ராசா வரை அனைவர் மீதும் உத்தரப்பிரேதசம் மகாராஷ்டிரா குஜராத் டெல்லி போன்ற மாநிலங்களில் வழக்கு பதிய தயாராகி உள்ளார்கள். இதனால் திமுக தலைமை அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம்.