
இந்தியாவின் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தம், முந்தைய நான்கு அடுக்குகளைக் கொண்ட வரி அமைப்பை குறைத்து, இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) மாற்றியுள்ளது. பால், முட்டை, பென்சில், நோட்டுப் புத்தகங்கள், தனிநபர் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடுக்கு வரி கிடையாதுஏசி, டிவி, சிறிய ரக கார், சரக்கு வாகனங்கள், ஆட்டோ, விவசாயப் பொருட்கள் உள்பட 175 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது ஆடம்பர பொருட்கள், குட்கா, பான்மசாலா, சொகுசு கார், சிகரெட், குளிர்பானங்களுக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்க தலையில் இடியை இறக்கியுள்ளது. இது தான் மோடியின் தரமான சம்பவம்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இது உலக நாடுகளுக்கு விதிக் கும் மிக அதிகபட்ச வரி ஆகும். இதையடுத்து இந்தியர்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான மனநிலை உருவாகி உள்ளது. குறிப்பாக, பெப்சி, கோக-கோலா, சப்வே, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்.
அமெரிக்காவின் அதிக வரி காரணமாக, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்க பொருட்களை ஏற்கெனவே புறக்கணிக்கத் தொடங்கி விட்டன. இந்த சூழ்நிலையில், 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவும் புறக்கணிக்கும்போது அமெரிக்க நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும். மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் நடத்தும் வெஸ்ட்லைப் புட்வேர்ல்டு கடந்த நிதியாண்டில் ரூ.2,390 கோடி வருவாய் ஈட்டியது. இது முந்தைய ஆண்டைவிட 5% அதிகம்.
இதுபோல பெப்சிகோ நிறுவனம் ரூ.8,200 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இந்நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தான் குளிர்பானங்களுக்கு 40%வரியை விதித்துள்ளார் பிரதமர் மோடி. இது அமெரிக்காவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்க செய்யும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினையாற்றி வருகிறது இந்தியா.
40%வாரியால் பெப்சி கோக-கோலா போன்ற குளிர்பானங்களை பொதுமக்கள் தவிர்க்க வாய்ப்புள்ளது. இதனால் பெரும் நஷ்டத்திற்கு அமெரிக்க நிறுவனங்கள் தள்ளப்படும். ஏற்கனவே வரி விஷயத்தில் அமெரிக்க நிறுவனங்கள் டிரம்ப்க்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் இந்தியாவின் நடவடிக்கை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெரும் மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியா இந்தியர்கள் அமெரிக்க பொருட்களை வாங்காமல் விட்டுவிட்டால், அமெரிக்க பொருளாதாரம் குலுங்கும். அங்கு விலையேற்றம் அதிகரிக்கும்.
டொனால்ட் டிரம்பின் அடாவடி வரி விதிப்பு, இந்தியாவுக்கு எதிரான செயல்பாடு உள்ளிட்டவை தொடரும் பட்சத்தில் இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை மக்கள் புறக்கணிப்பது வரும் நாட்களில் அதிகரிக்கலாம். ஏனென்றால் நம் மக்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற நடவடிக்கையை தொடங்கினர்.
உதாரணமாக இந்தியா - பாகிஸ்தான் போரில் துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்வது, துருக்கி நிறுவனங்களுடன் மேற்கொண்ட தொழில் ரீதியிலான ஒப்பந்தம், துருக்கி ஆப்பிள் உள்ளிட்டவற்றை நம் நாட்டு மக்கள் புறக்கணித்தனர். இது துருக்கியின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான பிரசாரம் சக்சஸ் ஆகும் பட்சத்தில் அந்த நிறுவனங்கள் பெரும் இழப்பை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது.