
முருகர் பக்தர்கள் மாநாடு முடிந்து 4 அந்நாட்கள் ஆகியும் அதைப்பற்றி பேச்சுக்கள் நின்றபாடில்லை. 'மழை விட்டாலும் துாவானம் விடாது' என்பது போல் மதுரையில் ஹிந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழக அரசியலில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.குறிப்பாக, 'இந்த ஆன்மிக மாநாடு தாக்கத்தை ஏற்படுத்தாது' என ஏளனம் பேசிய திராவிட கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் ஒருவிதமாக பேட்டி என்ற பெயரில் புலம்பி தள்ளி வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் முதற் வீடு திருப்பரங்குன்றம் மலையின் அந்த மலைக்கு உரிமை கொண்டாட ஆரம்பித்தது ஒரு பிரிவு. திருப்பரங்குன்றம் உரிமையாளர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்கா விற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற அனைத்து பகுதிகளும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என ஆங்கிலேயர் ஆட்சியின் போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கபட்டது. இதற்காக ஏற்கனவே ஹிந்து அமைப்புகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தியது. அப்போதும் திராவிட மாடல் அரசு போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை அதனை தொடர்ந்து நீதிமன்றம் படியேறி போராட்டத்தை நடத்தியது இந்து முன்னணி. வெறும் ஓரு மணி நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினார்கள்.
இந்த நிலையில் தான் குன்றம் காக்க என்ற பெயரில் முருகர் பக்தர்கள் மாநாடை நடத்தியுள்ளது இந்துமுன்னணி மற்றும் பாஜக. இது மிகப்பெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டுட்டள்ளது. திமுகவின் இந்துவிரோத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது, இந்த மாநாடு.
பிரமாண்ட கட் அவுட், மிரட்டும் பேனர், சினிமா செட்டிங்கை மிஞ்சும் மேடை அமைப்பு, 'தலைவா...தலைவா...' என தொண்டை கிழிய கத்திக்கொண்டு போதையில் விசில் பறக்கவிடும் ஆதரவாளர்கள் கூட்டம் என்பதை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக மக்கள், மதுரையில் கட்டுக்கோப்பாக நடந்த முருக பக்தர்கள் மாநாட்டை பார்த்து, இது அல்லவா மாநாடு என பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.'மாநாடு எப்படியும் சொதப்பி விடும்' என எதிர்பார்த்து காத்திருந்த திராவிடக் கட்சிகளுக்கு, மாநாட்டின் அடங்காத அதிர்வலைகள் மேலும் 'ஷாக்' கொடுத்துள்ளது.
மாநாட்டில் பக்தர்கள் எழுப்பிய முருக கோஷம் விண்ணை முட்டியது போல் அதன் அதிர்வலைகள் பல அரசியல் கட்சித் தலைவர்களின் காதுகளை இன்னும் குடைந்துகொண்டுள்ளது என்பது தான் எதார்த்தம்.பல்டியடித்த திருமாவளவன்இதன் எதிரொலியாக தான், மாநாடு நடப்பதற்கு முன் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கட்சியினருடன் வி.சி., தலைவர் திருமாவளவன் தரிசனம் செய்து திரும்பும் போது, அவரிடம் ஒரு பக்த தம்பதி செல்பி எடுக்க கேட்டுக்கொண்ட போது, தன்னுடைய நெற்றியில் பூசியிருந்த திருநீறை அழித்துவிட்டு செல்பி எடுத்தார்.
இது குறித்து அன்று மாலையே நிருபர்கள் கேட்டபோது அவர், 'நாள் முழுவதும் திருநீறை வைத்துக்கொண்டிருக்க முடியுமா' என வீராப்பாக பதிலஅளித்தார்.ஆனால் பின்னர் மாநாட்டின் பிரமாண்டத்தை பார்த்து கிறுகிறுத்து போன திருமாவளவன், 'நான் திருநீறை அழிக்கவில்லை. வியர்வையை தான் துடைத்தேன்' என சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் கலாய்க்கும் வகையில் 'கண்டென்ட்' கொடுத்துவிட்டு தற்போது தவிக்கிறார்.
மாநாட்டில் பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'திருநீறை அழித்தவர்கள் தேர்தல் நேரத்தில் ஹிந்துக்களின் ஓட்டுக்களை பிச்சை கேட்டு வருவார்கள். அப்போது பார்த்துக்கொள்ளுங்கள்' என எச்சரித்தார். அதன் பின் தான் சுருதி இறங்கிய நிலையில், திருமாவளவன் 'ஸ்டண்ட்' அடித்தார்.இவர் இப்படியென்றால் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பழநியில் நடத்தியது தான் உண்மையான ஆன்மிக மாநாடு; மதுரை முருக பக்தர்கள் மாநாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என ஏளனம் பேசிய தலைவர்கள், மாநாட்டிற்கு பின் டயலாக்கை மாற்றினர். இது தேர்தல் நேரத்திலும் எதிரொலிக்கும் என்பதால் திமுக என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறது.