
தற்போது திமுக பயத்தின் உச்சியில் இருக்கிறது பாஜகவை எதிர்த்து அரசியல் செய்வதை திமுக வேகப்படுத்தியது.. மதுரையில் திமுக பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் எந்த ‘ஷா’ வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே அவுட் ஆப் கன்ட்ரோல் தான். என எப்போதும் போல் வீர வசனம் பேசி கைத்தட்டலை வாங்கிவிட்டு அமலாக்கத்துறை ரெய்டு நடந்த போது டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் டெல்லியில் இருக்கும் வேளையில் இங்கு உதயநிதி மோடியாவது ஈடியாவது என பேசி வம்பை விலைக்கு வாங்கினார்
இதனை தொடர்ந்து சென்னையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித் ஷா மதுரையில் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பினார் உதயநிதி. குறிப்பாக எந்த ஷா வந்தாலும் அவுட் ஆப் கண்ட்ரோல், ஈடியாவது மோடியாவது என பேசிய உதயநிதி பதிலளிக்காமல் ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் தான் தற்போதும் திமுக தலையில் இடியை இயக்கியுள்ளார் ஆ.ராசா.
மதுரையில் திமுக நடத்திய பொதுக்குழுவுக்குப் போட்டியாக மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் பாஜக ஜூன் 8-ல் பிரமாண்டமாக நடத்தியது. அதுமட்டுமல்லாமல் மதுரையில் முருகபக்தர்கள் மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெற்றது. ஈந்த மாநாடு திமுக வயிற்றில் புளியை கரைத்தது முருக பக்தர்கள் மாநாடு குறித்து தான் தற்போது வரை பேச்சு இருக்கிறது இதை மடைமாற்ற தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து ஆ.ராசா தரைகுறைவாக பேசியுள்ளார். இது தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. திமுகவுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் மீண்டும் 2ஜி வழக்கு நடைபெற உள்ள நேரத்தில் ஆ.ராசா பேசியது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டாஸ்மாக் ஊழல், மின்சார ஊழல், கனிமவளக்கொள்ளை என பல்வேறு ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. பல அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது இதை எல்லாம் விரைவுபடுத்த டெல்லி உத்தரவிட்டுள்ளது. இதில் கோபாலபுர குடும்பமும் சிக்கும் இதற்கிடையே தான் ஆ.ராசா அமித்ஷா வை முட்டாள் என கூறியது திமுக தலைமைக்கு பெரும் கோபத்தை கிளப்பியுள்ளதாம்.
அதுமட்டுமில்லமால் ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய பழைய வீடியோக்கள் தற்போது வைரல் செய்யப்பட்டு வருகின்றது திருக்குறளை மாற்றி சொல்வதும் பழமொழியை திரித்து சொல்வதும் கூட்டல் கழித்தல் கணக்குகளை தவறாக பேசிய வீடியோக்கள் அனைத்தும் தற்போது இணையதளத்தை ரவுண்டு கட்டி வருகின்றது இது ஸ்டாலினுக்கு மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக தலைவரும் முதல் வருமான ஸ்டாலின் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருவது திமுகவுக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது
இதற்கெல்லாம் காரணம் ஆ ராசா என்பதால் அவரை இரவோடு இரவாக போன் போட்டு கடிந்து கொண்டுள்ளனர் அறிவாலய தரப்பினர் உதயநிதியவே அமைதியாக இருக்க சொல்லிவிட்டோம் நீங்கள் யார் அமித் ஷா குறித்து பேச அதுவும் தரைகுறைவாக பேச கடிந்துவிட்டார்களாம் அறிவாலய தரப்பு. இப்படி பேசினால் முருக பக்தர்கள் மாநாட்டை மறைத்து விடலாம் என நினைத்த ஆராசா திமுகவுக்கு பெரிய ஆப்பை சொருகியுள்ளார். இனி டெல்லியின் அதிரடிகளை திமுக தாங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்