
திமுகவின் சீனியர் அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு செய்யப்பட்டபோது ஏதும் பேசாமல் வாயை மூடி வேடிக்கை பார்த்தது திமுக மேலிடம் செந்தில் பாலாஜிக்கு செய்ததை கூட கருணாநிதி காலத்து உடன்பிறப்பான துரைமுருகனுக்காக செய்யவில்லை. ஜெகத்ரட்சகன் மூலம் டெல்லி சென்று வந்தார் துரை. மேலும் அவரது மகன் விவகாரத்திலும் திமுக தலைமை பெரிதாக தலையிடவில்லை. ஏற்கனவே திமுகவில் வன்னியர்கள் புறக்கணிப்படுகிறார்கள் என்ற பேச்சு உள்ளது. வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் வன்னியர் சமுதாயத்தை ஓரம் கட்டும் விதமாக மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மண்ணின் மைந்தரான துரைமுருகனை ஓரம் கட்டி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த எ.வ.வேலுவை பொறுப்பு அமைச்சராக நியமித்து தனது வன்னியர் விரோத போக்கை மீண்டும் நிலைநாட்டியுள்ளார் என வேலூர் பக்கம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்கள் முழுக்க முழுக்க தெலுங்கு லாபிகளை வைத்து அரசியல் செய்வதாக குற்றசாட்டுகளை வைத்து வருகிறார்கள் சீமான் போன்றவர்கள் அதற்கேற்றாற் போல் தன தற்போதும் நடந்துள்ளது திமுக. மேலும் திருமாவை வைத்து அரசியல் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளது திமுக வன்னியர்கள் ஓட்டுகள் சிதறும் ஆனால் மற்றவர்களின் ஓட்டுக்களை சிதறாமல் அள்ளி கொள்ளலாம் என்ற ரீதியில் தான் திமுக கணக்கை தொடங்கியுள்ளது. அதில் முதல் விக்கெட் துரைமுருகன் ஆவர். துரைமுருகன் விஷயம் வெளிய தெரிந்தவுடன் திமுக பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை போஸ்டர் ஓட்ட திட்டமிட்டுள்ளார்கள் துரையின் ஆதரவாளர்கள். மேலும் துரைமுருகனின் எதிர் துருவம் எ.வ.வேலுவிற்கு பொருளாளர் பதவி செல்ல உள்ளதாக கூறுகின்றனர்.
திமுகவின் முதல் இரண்டு முக்கிய பொறுப்புகள் என்பது தலைவர் பதவியும் பொதுச் செயலாளர் பதவியும் தான்.மதுரையில் நடந்த பொதுக்குழுவின்போதே ‘பொதுச்செயலாளராக டி.ஆர்.பாலு வரப்போகிறார். துரைமுருகன் விலகிக்கொள்ளப்போகிறார்’ என்கிற தகவல், தி.மு.க வட்டாரத்தில் ஓடியது. தற்சமயம், சில சந்திப்புகள் அந்தத் தகவலுக்கு வலுசேர்த்திருக்கின்றன. அதாவது, சமீபத்தில் துரைமுருகனைச் சந்தித்த மேலிட மாப்பிள்ளை, ‘நீங்க ஆக்டிவ்வாக இருந்தால், தலைவரோட பணிச்சுமைகள் குறையுமே... கட்சிக்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் நடக்கின்றன... அவற்றையெல்லாம் நீங்கள்தானே பேசிச் சரிசெய்ய வேண்டும்...’ என அழுத்தமான குரலில் சொல்லியிருக்கிறார்.
அதற்கு துரைமுருகனோ, ‘நான் ஆக்டிவ்வாக இல்லைனு நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா... ‘உடன்பிறப்பே வா’னு ஒரு நிகழ்ச்சி நடத்துறீங்க, அதற்கு என்னைய அழைச்சீங்களா... பொதுச்செயலாளர் இல்லாமலேயே நிர்வாகிகளை அழைத்துப் பேசுவது சரியா..?’ என எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார். “ஏற்கெனவே ஏகக் கடுப்பில் இருந்த துரைமுருகனிடம், பதவி விலகல் விஷயத்தை மேலிடம் மெல்லப் பேச ஆரம்பித்ததும், கடுப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டாராம் துரைமுருகன்.
மேலும் துரைமுருகன் அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகிறார். வயது முதிர்ச்சி காரணமாகவும் அவரால் முன்பு போல் ஆக்டிவாக இயங்க முடியவில்லை.'என அறிவாலயம் கூறுகிறதாம். ‘நிலைமை இப்போது துரைமுருகனுக்குச் சாதகமாக இல்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அவராகவே முக்கிய முடிவுகளை நோக்கி நகரும்படி, தலைமை காய்நகர்த்திக் கட்டம் கட்டுகிறதாம். அதனால்தான், மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில் துரைமுருகனிடம் பேசப்பட்டிருக்கிறது’ என்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள். ‘எந்த ரூட்டில் சென்றால் தன் பதவி தப்பிக்கும்...’ எனப் புரியாமல் தவிக்கிறாராம் துரைமுருகன். ஆனால், எப்படியும் திட்டமிட்டபடி தலைமைக் கழகத்தில் ‘செய்ய நினைக்கும்’ மாற்றங்களை, செய்தே தீரும் முடிவில் இருக்கிறதாம் தலைமை”
ஜெகத்ரட்சகன் துரைமுருகன் உள்ளிட்ட சில முக்கிய சீனியர் அமைச்சர்கள் ரகசிய மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்கள். இந்த தேர்தலில் பணத்தை இறக்க வேண்டாம் மேலும் டெல்லியின் முக்கிய துறையிடம் பல பைல்களை மெயில் செய்துள்ளார்களாம். மத்திய அமைச்சரிடம் நேரம் கேட்டுள்ளதாககவும் தகவல்கள் கிடைத்துள்ளது.