Cinema

பல வருடம் கழித்து உண்மையை உடைத்து கூறிய கே எஸ் ரவிக்குமார்!!

KS Ravikumar
KS Ravikumar

தமிழ் திரைப்பட இயக்குனர்களின் தனக்கென்று தனி நடயையும் வசூல் ரீதியாக தொடர் வெற்றியும் கண்டு வரும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்... மேலும் இவர் இயக்கம் பெரும்பாலான திரைப்படங்கள் குடும்ப பாங்கில் எடுக்கப்பட்டவையாகவும் நகைச்சுவை கலந்த ஒன்றாகவும் இருக்கும். மேலும் தான் இயக்கம் ஒவ்வொரு படத்திலும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் தோன்றுவது இவரது வழக்கமாக உள்ளது. முதன்முதலாக புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்து தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கண்டவர். மேலும் இவர் இயக்கிய பல படங்கள் இன்றளவும் பலரின் மனதை விட்டு நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில், சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, சுயம்வரம், பஞ்சதந்திரம், சரவணா மற்றும் தசாவதாரம் என தொடர்ச்சியாக பல படங்களை இயக்கி அந்த படங்களில் பெரும்பான்மையானவற்றில் வெற்றியை கண்டுள்ளது.


மேலும் மக்களையும் திருப்திப்படுத்தி வசூல் ரீதியாக நல்ல வசூலையும் கண்டு நடிகர்களின் வெற்றி மகுடம் சூட்டும் படமாகவே கே எஸ் ரவிக்குமாரின் படங்கள் இருந்து வந்துள்ளது. ஆனா சமீபத்தில் படங்கள் இயக்குவதை நிறுத்தி வைத்த கே எஸ் ரவிக்குமார் சில திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் தங்க மகன், ரெமோ, கோமாளி மற்றும் நான் சிரித்தால், அன்னபூரணி ஆகிய திரைப்படங்களில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய கே எஸ் ரவிக்குமார் தனது ஒரு படத்தின் தோல்விக்கு காரணமாக இருந்த ஒரு நபரை குறித்து கூறியுள்ளார்.

அதாவது 2010ல் சரத்குமார் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ஜக்குபாய் திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு இவர்தான் காரணம் என்ற வகையில் கேஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நடிகர் சரத்குமார் மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளியான பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக சேரன் பாண்டியன், நட்புக்காக, பாட்டாளி மற்றும் ஊர் மரியாதை ஆகியவை நல்ல வரவேற்பை பெற்ற படங்கள். 

இதனை அடுத்து இவர்களின் கூட்டணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜக்குபாய் திரைப்படம் வெளியானது இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ரவிக்குமார் மற்றும் சரத்குமார் கூட்டணி என்றாலே அதனை அடிச்சுக்க முடியாது அப்படி சூப்பர் டூப்பர் ஹிட்டான படமாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் இந்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு தான் யார் காரணம் என்பதை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி உள்ளார் ரவிக்குமார். அந்த பேட்டியில், திரைப்படங்களை பொருத்தவரையில் ஒரு கதை படமாக மாறுவதற்கு பின்னால் பல உழைப்புகளும் போராட்டங்களும் இருக்கிறது அவ்வளவு எளிதாக ஒரு கதையை படமாக மாற்றிவிட முடியாது. 

அப்படி நான் இயக்கிய பல படங்களில் பல போராட்டங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கிறேன். அப்படி நான் சந்தித்தவற்றில் ஜக்குபாய் திரைப்படத்தை என்னால் மறக்கவே முடியாது. ஏனென்றால் வழக்கமாக என் நடையிலே அந்த படத்தை நான் உருவாக்கினேன். ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே நடிகர் சரத்குமார் உடன் இருந்த ஒரு நபர் ஜக்குபாய் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு விட்டார். அதற்குப் பிறகு அந்த படத்தை வெளியிட்ட வரை கைது செய்து விட்டோம். இருப்பினும் அந்த நபர் வெளியிட்ட படத்தை பலர் பார்த்து விட்டதால் அதனை அப்படியே மீண்டும் திரையிட முடியாது என்பதற்காக சில எடிட்டிங் செய்யப்பட்டது அப்படி செய்யப்பட்ட எடிட்டிங்கில் நான் கொண்டு வந்த கதை மொத்தமும் மாறி பெரும் தோல்வியை இந்த படம் சந்தித்தது என்று பரபரப்பாக பேசியுள்ளார். இந்த செய்தியை தற்போது இணையம் முழுவதும் படுவைரலாகி வருகிறது.