Cinema

பேசாத பேச்செல்லாம் பேசிவிட்டு இப்போ வசமா சிக்கிய ஜோதிகா...!

JOTHIKA
JOTHIKA

நடிகை ஜோதிகா தனது வாக்கினை செலுத்தவில்லை என்றும், எப்போதும் ஜனநாயக கடமையை பற்றி மற்றவர்களுக்கு அறிவுரை கூறி வருபவர்  தற்போது ஜனநாயக கடமையை அவரே செய்யவில்லை என்பதும் இணையங்களில் வைரலாக பேசப்பட்டு வந்தது. ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், பல அரசியல்வாதிகளும் மற்றும் பல திரை பிரபலங்களும் அவரவர்களுக்கு உரிய வாக்கு செலுத்தும் காவடிகளுக்கு சென்று அவர்களின் ஜனநாயக கடமையை சரியாக செலுத்தி வந்தனர். மேலும் வாக்கினை செலுத்துவதற்கான நேரம் காலை 7:00 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரையிலும் குறிக்கப்பட்டு இருந்தது. இதில் நடிகர் அஜித்குமார் முதல் முதலில் 7:00 மணிக்கே சென்று தனது வாக்கினை செலுத்தினார். மேலும் நடிகர் விஜய் தனது கோட்  திரைப்படத்தின் சூட்டிங்ிற்காக வெளிநாட்டில் இருந்த நிலையில் அங்கு சரியான மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதன் காரணமாக விமானத்தின் சேவைகள் நிறுத்தப்பட்டன. எனவே நடிகர் விஜய் அவரின் ஓட்டினை செலுத்துவதற்கு தமிழ்நாட்டிற்கு வருவாரா?? மாட்டாரா?? என்றும், அவர் அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுதான் என்றும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது.


ஆனால் இதைத்தொடர்ந்து அங்கு மழையின் சிற்றம் குறைவாக இருந்ததால் விமானங்கள் இயக்கப்பட்டு அன்றே நடிகர் விஜய் வெற்றிகரமாக தமிழ்நாட்டிற்கு வந்து அவருக்காக ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் அவரின் ஜனநாயக கடமையை செய்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரின் குடும்பத்தார்கள், மேலும் பல இயக்குனர்கள் நடிகர்கள், நடிகைகள் அவர்களின் வாக்குகளை தொடர்ந்து பதிவு செய்து விட்டு சென்றனர். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி மற்றும் அவரின் தந்தையும் வந்து அவர்களின் வாக்கினை செலுத்தி விட்டு சென்றனர்.இப்போது பத்திரிக்கையாளர்களிடம்  நாங்கள் எங்களின் ஜனநாயக கடமையை செய்து விட்டோம் என்று சூர்யா கூற.. அப்போது பத்திரிக்கையாளர்கள் ஜோதிகாவை எங்கே என்று கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் சூர்யா அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து ஜோதிகா  ஏதேனும் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் போல என்று நினைத்து அதனை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது நடிகை ஜோதிகா அவரின் வாக்கினை செலுத்தாததற்கான உண்மையான காரணத்தை அனைவரும் தெரிந்து கொண்டனர்!! 

 அது என்ன காரணம் என்றால் மக்களவைத் தேர்தல் நடக்கும்  நேரத்தில் நடிகை ஜோதிகா சுற்றுலாவிற்காக நேபாலுக்கு சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர் சுற்றுலாவிற்கு சென்றிருக்கும் வீடியோவையும் பதிவு செய்து தனது instagram அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் ஓ இதற்காகத்தான் நடிகை ஜோதிகா வாக்களிக்க வரவில்லையா என்று கேள்விகளை பலவாறு எழுப்பி வருகின்றனர். எப்போதும் எல்லோருக்கும் ஏதாவது உபதேசம் கூறும் இவர்களே இப்படி ஜனநாயக கடமையை ஒழுங்காக செய்யாமல் சுற்றுலா தான் முக்கியம் என்று சென்று இருப்பது அனைவரின் மத்தியிலும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இன்னும் இதற்கான சரியான காரணத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் கூறாமல் இருந்து வருகின்றனர். தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது!!ஏற்கனவே கடந்த ஆட்சியில் படிப்பு, கோவில் என எதையாவது பேசி அரசியல் செய்த ஜோதிகா இப்பொது எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது வேறு இணையத்தில் வைரலாகிறது.....