Cinema

ஒரு நாள் ஸ்டாராக சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்ற தர்ஷனா...

Darshana
Darshana

முன்பெல்லாம் ஒருவர் தனது கனவாக சினிமாவில் பிரவேசிப்பதை எடுத்துக் கொண்டால் நிச்சயம் அவரது பெற்றோர்கள் அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பல எதிர்ப்புகளை தாண்டியே அவர்கள் சினிமாவிலும் சின்ன திரையிலும் நுழைவார்கள் ஆனால் தற்போது இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது ஒருவர் நான் நடிகராக விரும்புகிறேன் என்றால் அவரை வியந்து பார்க்கும் உலகமாகவும் அவரது முயற்சிக்கு பல வழிகளில் தற்போது கரங்கள் நீட்டப்படுகிறது. அவரது பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பும் வழங்குகிறார்கள். ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு இணையதள உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் மேலும் ஒரு ஸ்டார் என்ற பெயரை வாங்குவதற்கு பல வெற்றிகளை ஒருவர் பெற வேண்டி இருக்கும்! ஆனால் இன்று ஒரு நாள் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ஸ்டார், youtube ஸ்டார் என பல ஸ்டார்கள் முளைத்துள்ளார்கள்! 


ஒரு நாள் ஸ்டார் அப்படி என்றால் என்ன என்று உங்களுக்கு கேள்வி தோன்றலாம் அதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒரு ஸ்டார் கொடுக்கும் முக பாவனைகளால் இணையதளம் முழுவதும் அதிக லைக்யும் ஸ்ரையும் பெறுகிறார் என்றால் அவரே அன்றைய தினத்திற்கான ஸ்டார்! அப்படி சமீபத்தில் கிரிக்கெட் மைதானத்தில் கப் நமதே என்று ஒரு கிரிக்கெட் ரசிகை கூறிய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கிறோம் அவர் அன்றைய தினத்திற்கான ஸ்டாராக பலரால் ரசிக்கப்பட்டார். அதே வரிசையில் தற்போது மற்றுமொரு பெண்  ஸ்டாராக சமூக வலைதளம் மூலம் கவனம் பெற்றார். ஆனால் இவர் ஒரு சீரியல் நடிகை ஆவார்,, அதாவது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் மூலம் வசுவாக பலரது மனதை கட்டி போட்ட தர்ஷனா ஸ்ரீபால் தான் அந்த ஒருநாள் ஸ்டார்! இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் நடிப்பதற்கு முன்பாகவே பிரபல முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முன்னணி தொடரின் வில்லியாக எடுத்திருந்தார்.

அதற்குப் பிறகு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த ஒரு சீரியலான தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் வசுந்தரா என்று கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவரைக் குறித்து விசாரிக்கும் பொழுது இவர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றும் திருச்சியில் தனது படிப்பை முடித்துவிட்டு பேஷன் டிசைனிங் காக சென்னை வந்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது. அதுமட்டுமின்றி சன் டிவியில் தொகுப்பாளனியாக வேலை கிடைத்து ஆதித்யா சேனலின் வேலை செய்து பிறகு சித்தி 2 என்ற சீரியலில் முதலில் நல்ல கேரக்டரில் நடித்த பிறகு வில்லியாக மாறும் கேரக்டரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வந்தார். அதற்குப் பிறகு இவர் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்தார். எப்படி இவருக்கு சித்தி 2 சீரியலில் நல்ல வரவேற்பு கிடைத்ததோ அதேபோன்று தமிழும் சரஸ்வதியும் தொடரில் வசுவாக நடித்த பொழுதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் வேறு ஒரு தொலைக்காட்சியின் தொடரில் முன்னணியில் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் அதனால் இந்த தொடரில் இருந்து விலகினார் தர்ஷ்னா. இதனை அடுத்து தற்பொழுது பூவா தலையா என்ற தொடரில் முன்னணி நடிகையாக நடித்த வருகிறார். அப்பொழுது கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் ஐபிஎல் போட்டி நடைபெற்ற பொழுது அதைக் காண தர்ஷனாவும் சென்றுள்ளார், அப்போது சமூக வலைதளத்தில் அவரது ரியாக்சன் குறித்த புகைப்படங்கள் அனைத்தும் பதிவிடப்பட்டதோடு வைரலானது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த தர்ஷனா தனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதையும் சிஎஸ்கே என்னுடைய பேவரட் என்பதையும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி டிவியில் கிரிக்கெட்டை பார்ப்பதற்கும் நேரடியாக வந்து கிரிக்கெட்டை பார்ப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். அதோடு இவரது புகைப்படத்திற்கு பலர் கழுத்தில் அணிந்திருந்த மஞ்சள் கயிறு தாலியா? இவருக்கு திருமணமாகிவிட்டதா என்று பல விமர்சனங்களை முன்வைத்தனர் ஆனால் பிறகு தான் தெரிகிறது அது தாலியல்ல விசில் அப்படீன்னு...!