Cinema

அஜித்திற்கு நடிப்பதில் இஷ்டமே கிடையாது!! பிரபல இயக்குனர் பேட்டி!! வெளிவரும் உண்மைகளால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

AJITH,  LINGUSAMY
AJITH, LINGUSAMY

இந்திய திரை உலகத்தில் பிரபலமான நடிகர்களின் மிகவும் முக்கியமான நடிகராக அனைவராலும் பார்க்கப்படுபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் இன்று வரையிலும் 61 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் முதல் முதலில் 1990 இல் காதல் நாடகமான என் வீடு என் கணவன் என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து 1995 ஆம் ஆண்டில் ஆசை என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதில் இவருடைய நடிப்பினை பார்த்து இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகினர். இதுதான் இவரின் முதல் வெற்றி படமாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து மேலும் பல படங்களில் சூப்பராக நடித்து அவற்றின் மூலம் அதிக அளவில் வரவேற்பை பெற்று வந்தார். இருப்பினும் பல படங்களில் தோல்வியையும் சந்தித்தார்.இதனைத் தொடர்ந்து  2005 ஆம் ஆண்டில் இவரின் நடிப்பில் ஜி என்ற திரைப்படம் வெளியானது. இந்த ஜி திரைப்படமானது அரசியல் அதிரடி திரைப்படமாக கதையினை கொண்டிருந்தது.


இந்த திரைப்படத்தினை என். லிங்குசாமி அவர்கள் எழுதி இயக்கியது ஆகும்.திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகர் அஜித்குமாருக்கு 2005 ஆம் ஆண்டில் தனது ஜி என்னும் திரைப்படமும் பெரிய அளவில் தோல்வியை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.ஆனால் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் விருப்பமே இல்லாமல் தான் நடித்தார் என்று தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது!! அதை யார் கூறினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா??? பிரபல இயக்குனரான லிங்குசாமி தான் நடிகர் அஜித் குமாரை வைத்து  ஜி திரைப்படத்தினை இயக்கினார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!! சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் ஜி திரைப்படத்தில் நடந்தவற்றை இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்!! ஆனந்தம், ரன் போன்ற திரைப்படங்களை இயக்கி வெற்றியினை கண்டு வந்த லிங்குசாமி அவர்களுக்கு ஜி திரைப்படமானது வெற்றியை தரவில்லை. 

மேலும் நடிகர் அஜித்திற்கு ஜி திரைப்படத்தில் நடிப்பதில் இஷ்டமும் இல்லை என்று இயக்குனர் லிங்குசாமி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்போது அஜித்திற்கு கார் ரேஸில் மட்டுமே அதிக அளவில் ஈடுபாடு இருந்தது என்றும், நீண்ட நேரத்திற்கு ஷூட்டிங் சரியாக நடக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் அஜித்தை வைத்து எடுத்த ஜி திரைப்படமானது மிகவும் ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால் பொது இடங்களில் தான் ஷூட்டிங் எடுக்க வேண்டும் என்றும், அஜித்தின் தாடி போன்றவை  ரியலாக இருக்க வேண்டும் என்றும்  கூறி இருந்தேன். மேலும் இடங்களில் ஷூட்டிங் எடுக்கும் பொழுது ரசிகர்களால் பல வகையில் இடர்பாடுகள் ஏற்பட்டு கொண்டே தான் இருந்தது. மேலும் அஜித்திற்கும் இந்த திரைப்படத்தில் நடிப்பதில் அதிக அளவில் ஈடுபாடு இல்லை. அதனைத் தொடர்ந்து எனக்கும்  திரைப்படத்தை இயக்குவதில் இஷ்டமே இல்லை என்று கூறியிருக்கிறார். எனவே நாங்கள் இருவரும்  திரைப்படம் எப்போது தான் நிறைவு பெறும் என்றும், சூட்டிங் எப்போது தான் முடியும் என்றும், எதாவது இயற்கை பேரிடர் வந்து ஷூட்டிங்கின் போது பிலிம் ரோலை அழிந்து விடாதா என்று வேண்டிக் கொண்டிருந்தேன்!! என்று இயக்குனர் லிங்குசாமி கூறியிருப்பது மிகவும் ஷாக்கிங்காக இருக்கிறது!! தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது!!