Cinema

உயிருக்கு போராடி வரும் பிரபல நடிகை அருந்ததி!!! இவ்ளோ கொடுமையா...?

ARUNDHATHI
ARUNDHATHI

இந்திய நடிகையாக வளம்வந்து கொண்டிருத்தவர் அருந்ததி!! இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வரும் நடிகை ஆவார். 2018ல் முதன் முதலில்  அவர் மலையாளத்தில் ஒட்டகொரு காமுகன்  மூலம் அறிமுகமானார். அதில் இவருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருந்ததால் அனைவராலும் வரவேற்கப்பட்டார். அதன்பின் இவர் நடித்த பல படங்கள் வெளியாக்கினாலும் அதிக அளவில் பாக்ஸ் ஆபிஸ் பெறவில்லை. இதன் பின் தனது கதாபாத்திரங்களை சரியாக கேட்டு அதை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து சைத்தான் (2016) படத்தில் விஜய் ஆண்டனியின் மனைவியாக  சூப்பராக நடித்து அதன் பின் மக்கள் அனைவராலும் வரவேற்கப்பட்டார்.  ஆனால் இதற்கு முன்னரே பொங்கி எழு மனோகரா என்னும் திரைப்படத்தில் 2014 இல் நடித்தார். அதன்பின் விருமாண்டிக்கும் சிவனந்திக்கும் என்னும் திரைப்படத்தில் 2016 ஆம் ஆண்டு நடித்தார்.


ஆனால் இவை இரண்டும் பெரிதாக பாக்ஸ் ஆபிஸ் பெறவில்லை. அதன்பின் வெளியான சைத்தான் படத்திலிருந்து இவர் மக்கள் மனதில் இடம்பெற்றார். அதனை தொடர்ந்து ஒட்டகொரு காமுகன்,கன்னி ராசி, பிஸ்தா போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஆயிரம் பொற்காசுகள் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.இது போன்று பல பிரபலங்களோடு நடித்து தனது திறமையை மென்மேலும் வெளிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல்  தனியார் தொலைக்காட்சியில் கேரள சமாஜம் என்று நிகழ்ச்சியில் 2019ம் ஆண்டில் பங்கேற்று எங்கெல்லாம் அவருக்கு திறமை வெளிப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டு வந்தார்!!இவ்வாறு தற்பொழுது வளர்ந்து வரும் சமயத்தில் நடிகை அருந்ததி நாயர் மார்ச் 14 அன்று ஒரு பைக் விபத்தில் சிக்கினார். அவரது சகோதரி ஆரத்தி நாயர், இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி, அருந்ததி படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் உள்ளார். 

கோவளம் புறவழிச்சாலையில் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பைபாஸ் சாலையில் இரவு தனது சகோதரருடன் இருந்த சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சமயத்தில் அடையாளம் தெரியாத வாகனம் எதுவோ ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அருந்ததியின் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இவர் மிகவும் கவலைக்கிடங்கமாக உள்ளார் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். சினிமா துறையில் பல ஆண்டுகள் கடின உழைப்பு செய்து தற்போது தான் ஓரளவு மக்கள் மத்தியில் பெயர் பெற்றார். அதற்குள் இப்படி ஒரு செயல் நடந்திருப்பது அவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

கொஞ்சம் படம் நடித்தாலும், அவரின் திறமையால் சிறந்த கதாபாத்திரங்களாக நடித்து மக்கள் மனதில் பதிய வைத்த நடிகை அருந்ததி மீண்டும் சரியாகி வந்து பல படங்களை நடித்து தர வேண்டும் என்று  அவர்களின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கின்றார் என்று தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே உள்ளது. இப்படி இவர் சீரியஸாக உள்ள நிலையில் மருத்துவர்கள் விடாமல் முயற்சி செய்து எப்படியாவது காப்பாத்தி விட வேண்டும் என்று தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்!! இதைத்தொடர்ந்து எப்படியாவது சரியாகிவிட வேண்டும் என்று இவரின் ரசிகர்கள் கடவுளிடம் பிரார்த்தனையும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இவர் உடல்நிலை குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!!