24 special

பிரதமர் மோடிக்கிட்ட பாடம் கத்துக்கோங்க…. ஜோசப் விஜய்யை விளாசி தள்ளிய சொந்த ரசிகர்..!

Vijay modi
Vijay modi

நடிகர் விஜய் உண்மையான நடிகர் என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்து இருந்தது அவரது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி கதையை அவரே முதலில் பின்பற்ற வேண்டும் என விஜய்யின் தீவிர ரசிகரான நந்த கோபால் எழுப்பிய கேள்விகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் வாரிசு படம் அடுத்த மாதம் 12ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த விழாவில் விஜய் சொன்ன குட்டிக் கதைகள் இப்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் சொன்ன 'சாக்லெட்க் கதை அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.

அவர் சொன்ன கதை வருமாறு: ஒரு குடும்பத்தில அப்பா அம்மா தங்கை அண்ணன் இருக்காங்க. அப்பா தினமும் தன் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்கிட்டு வராரு. தங்கச்சி தனக்கு கொடுத்த சாக்லேட்டை தினமும் உடனே சாப்பிட்ருவாங்க. அண்ணன் மட்டும் சாக்லேட்டை ஒளிச்சு வைச்சு மறுநாள் சாப்பிட நினைப்பார். ஆனால் தங்கை அந்த சாக்லேட்டையும் எடுத்து சாப்பிட்டு விடுவார்.

ஒரு நாள் தங்கச்சி அண்ணன்கிட்ட அன்புன்னா என்னனு கேட்கும் போது, நீ எடுப்பனு தெரிஞ்சும் நான் அதே இடத்துல திரும்ப, திரும்ப சாக்லேட் வைக்கிறேன்ல அதுக்கு பேரு தான் அன்பு. அன்பு மட்டுமே உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரு விஷயம். ரசிகர்களின் அன்பே எனக்கான போதை. அன்பே என்பது உலகின் மிகப்பெரிய ஆயுதம். என்றார்.

வாரிசு விழாவிற்கு விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் வந்திருந்தார்கள். எல்லோருக்கும் கைகுலுக்கி வணக்கம் சொல்வதை போல சாதாரண மனிதர்களை போல அவர்களுக்கும் சொல்லி சென்றார்.“கடந்த பல ஆண்டுகளாக தந்தையை பிரிந்து வாழும் விஜய், அவர் சொன்ன அன்பு கதையை அவர் தனக்கே திருப்பி சொல்லி தனது பெற்றவர்களுடன் அன்பை செலுத்த வேண்டும்” என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வரும் சூழலில்..,

இதுநாள் வரை விஜய்யின் தீவிர ரசிகராக திண்டுக்கல்லை சேர்ந்த நந்தகோபால் என்பவர் அவரது முகநூலில் பதிவிட்டுள்ள தகவல் கடும் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது, விஜய் அண்ணா நீங்கள் அடைந்த உயரம் மிக பெரியது இந்த இடத்திற்கு நீங்கள் வர பல கஷ்டங்களை சந்தித்து இருப்பீர்கள் ஆனால் இவ்வளவு உயரம் சென்ற நீங்கள் உங்களை உயர்த்திய பெற்றோரை நடு ரோட்டில் யாரோ போல கவனிக்காத விதமாக செல்வது உண்மையில் வேதனையாக இருக்கிறது.

முதலில் நீங்கள் மாறுங்கள் பிறகு மற்றவருக்கு அறிவுரை சொல்லலாம் உங்களுக்கு பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் தொலைபேசியில் தோற்றேன், நேற்று கூட உங்கள் பெற்றோர் தொடர்பு கொண்ட போது யார் செல் போனை எடுத்தது என உங்கள் மன சாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

உலக தலைவராக உயர்ந்த இந்திய பிரதமர் மோடி கூட அவரது தாய் பிறந்த நாளில் நேரடியாக சென்று அவரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார் ஆனால் நீங்கள் 10 ஓடு பதினொன்றாக உங்களது பெற்றோருக்கு கை குலுக்கி செல்வது நீங்கள் எவ்வளவு தூரம் நடிகனாக மாறி இருப்பதை உணர்த்தி இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.

படத்தில் பல காட்சிகளில் அம்மா அப்பாவை வணங்கி பாரு எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என பேசிய விஜய் இப்போது தனது பெற்றோரை கவனிக்காமல் சென்றது விஜய்யை பெரிதாக மதிக்கும் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.