Tamilnadu

நீங்க இந்தி ஆதரவாளர் "முத்திரை" குத்திய செந்தில் ..25 வருடமா என்னத்த கிழிச்சாங்க வெளுத்துவிட்ட தமிழ்மணி !

tamilmani
tamilmani

தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் தனக்கு தமிழ் தெரியாது எனவும் இந்தி தெரிந்துகொள் என பேசிய சம்பவத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது , இதனை செந்தில் தொகுத்து வழங்கினார் .நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் தமிழ் மணி கலந்துகொண்டு தனது கருத்தை தெரிவித்தார் .


இதில் முக்கியமான இரண்டு சம்பவங்கள் நடைபெற்றன ஒன்று சட்டப்பிரிவு 351-ல் என்ன இருக்கு என உங்களுக்கு தெரியுமா ? என செந்திலை நோக்கி கேள்வி எழுப்பினார் தமிழ் மணி அதற்கு தெரியும் என பதில் சொன்னார் செந்தில் அப்போது எங்கே சொல்லுங்க என துணை கேள்வி வைக்க வாயடைத்து போனார் செந்தில்  அப்போது தமிழ் மணி வாய்விட்டு சிரித்துவிட்டார் .

இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் இந்திக்காரன் வந்தால் தமிழில் பதில் சொல் என கேட்பதும் இந்திக்காரன் இந்தியில் பதில் சொல் என கேட்பதும் இரண்டுமே  முட்டாள் பசங்க செய்வது இரண்டுமே மொழி வெறி என பதில் அளித்தார் தமிழ்மணி இதை கேட்ட செந்திலின் முகம் வாடிவிட்டது , குறுக்க மறித்து தமிழ்மணியிடம் கேள்வி எழுப்ப இப்போ மோடியை திட்டணுமா என பளார் என வெளிப்படையாக  செந்திலை  நோக்கி கேட்டே விட்டார் .

சட்டப்புத்தகம் 351-ல் இந்தி மொழியை மத்திய அரசு ப்ரொமோட் செய்யவேண்டும் என சட்டத்திலேயே இருக்கிறது அதை தான் மோடி செய்கிறார் என தமிழ்மணி தெரிவிக்க அதற்கு நீங்கள் இந்தி ஆதரவாளர் என செந்தில் முத்திரை குத்த ,நான் இந்தி எதிர்ப்பாளர் இல்லை என்னிடம் கேள்வி கேட்க கூடாது 25 ஆண்டுகளாக மத்திய அரசில் கூட்டணியில் இருந்தாங்களே அவங்களை கேட்கவேண்டும் ,என்னத்த கிழிச்சீங்க என வெளுத்து எடுத்துவிட்டார் .

இந்த விவாத நிகழ்ச்சியில் செந்தில் தரப்பு பதில் இல்லாமல் பாதியில் விவாதத்தை திசை திருப்பிய சமபங்களும் அரங்கேறியதாக பலர் குற்றம் சுமத்துகின்றனர் .வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.