Politics

வாயை கொடுத்து வாங்கிகட்டிய காங்கிரஸ் முதலமைச்சர் !!

வாயை கொடுத்து வாங்கிகட்டிய காங்கிரஸ் முதலமைச்சர் !!
வாயை கொடுத்து வாங்கிகட்டிய காங்கிரஸ் முதலமைச்சர் !!

சீனத்தொற்று இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மட்டும் அல்லாமல் மக்களின் உயிரையே தன் அகோரப்பசிக்கு இரையாக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்..ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வரின் பொறுப்பற்ற இந்த பேச்சு மத்திய பிரதேச மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.


மே 23 ஞாயிற்றுக்கிழமை மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் நடைபெற்ற காங்கிரஸ் சார்பான பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் கமல்நாத் அவர்கள் "உலகில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வகை வைரஸ் இந்தியாவில் இருந்தே உருவாகிறது.இதற்கு இந்திய அரசே முழுப்பொறுப்பு" என கூறினார்.

இவர் ஏற்கனவே தடுப்பூசிகள் பற்றி பல அவதூறுகளை கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பேச்சுகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் என்று தெரிந்தும்.. தான் ஒரு முன்னாள் முதல்வர் என்பதையும் மறந்து இவர் பேசிய பேச்சுகள் பலரையும் புண்படுத்தியது..

மே24 மத்திய பிரதேச பிஜேபி மேலிடம் சார்பாக நடந்த மீட்டிங்கில் கமல்நாத் மீது வழக்கு பதிய விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல்நாத் அவர்கள் மீது போபால் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கமல்நாத் மீது செக்சன் 188 (Disobedience to order duly promulgated by a public servant IPC 54 (Making or circulating a false alarm or warning as to disaster or its Severity or magnitude leading to panic) ஆகிய இருபிரிவுகளில்  National Disaster Management 2000 Act ன் கீழ் FIR பதியப்பட்டுள்ளது..

உலகில் உள்ள மற்ற நாடுகளில் எந்த முன்னாள் அமைச்சரோ  அதிபரோ தத்தம் நாடுகளுக்கு எதிராக பேசுவதில்லை.ஏன் கொலைகார வைரஸை பரிசளித்த சீனாவில் கூட தேசத்துக்கு எதிரான ஒரு கருத்துகளை கேட்க முடியாது..ஆனால் ஜனநாயகம் கருத்துரிமை எனும் போர்வையில் சில புல்லுருவிகளால் தேசத்தின் மேன்மைக்கு குந்தகம் வருவதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

.....உங்கள் பீமா