
ஹிந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதேனும் ஒரு தலைப்பில் மாநாடு நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில், தமிழகத்தில் அதிகம் வணங்கப்படும் முருகனை முன்னிறுத்தி மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே உள்ள மைதானத்தில் ‛குன்றம் காக்க... கோயிலை காக்க...' எனும் தலைப்பில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. ஆன்மிகம் சார்ந்து மட்டுமில்லாமல், தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டை வெளிபடுத்தும் வகையில் அமைந்தது இது திராவிட கட்சிகளின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது. ககுறிப்பாக தமிழகம் முழுவதும் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்த மாநாடு எதிரொலித்துள்ளது
தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடல் இழிவுபடுத்தப்பட்ட விவகாரத்தின் போது திராவிட அரசியல் கட்சிகள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை ஆனால் தமிழக பாஜக கறுப்பர் கூட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியது. அது முருக பக்த்தர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது.அதனை தொடர்ந்து சென்னிமலை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திலும் திராவிட கட்சிகள் வாயை மூடி கள்ள மௌனம் காத்தது..ஆனால் முருகன் மலையை காக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து முன்னணி களத்தில் குதித்தது. இதனை இப்படியே விட்டால் தமிழ்கத்தில் முருகன் இருக்கும் இடங்கள் எல்லாம் காணாமல் போகும் என குன்றம் காக்கஎன மாநாட்டை ஒருங்கிணைத்தது ஹிந்து முன்னணி.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வந்த பக்தர்களை, ஹிந்து முன்னணியை சேர்ந்த சுமார் 2,000 தொண்டர்கள் வழிநடத்தினர். போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினாலும், மாநாட்டு திடலில் போலீசார் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் நின்றனர். என்றாலும் எந்த சலசலப்பும் இல்லாமல், கட்டுப்பாட்டோடு பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
லட்சக்கணக்கானோர் திரண்ட போதும் கூட்டத்தில் ஒரு ஒழுங்கு இருந்தது. பக்தர்கள் வரிசையாகவே சென்றனர். உணவு வாங்க, மேடையில் தலைவர்களுக்கு சால்வையணிவிக்க என்று யாரும் முண்டியடித்து முன்னேறவில்லை. கண்ட இடத்தில் இருந்து சாப்பிடவில்லை; அதற்கான பகுதியில் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டனர். தலைவர்கள் பேசும்போதும், கலைநிகழ்ச்சிகள் நடக்கும்போதும் அரங்கில் கட்டுப்பாடுடன் அமர்ந்து கொண்டிருந்தனர். அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கவில்லை. நிகழ்ச்சிக்கு உள்ளே நுழைந்தவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகே வெளியேறினர். நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது. ஆபாச கலைநிகழ்ச்சிகள், குத்துப்பாட்டு இல்லை; மாறாக பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன.* யாரும் மது அருந்தி தகராறு செய்யவில்லை; கோவிலுக்கு போவது போல பலரும் விரதத்துடன் பயபக்தியுடன் வந்தனர்.
மேடையில் அறிவிப்பு செய்பவர் சொல்வதை லட்சக்கணக்கானோர் அப்படியே கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர். மழை துாறியபோது யாரும் அசையவில்லை. ஆனால், கட்சிகளின் மாநாட்டில் இப்படி மழை பெய்தால் அமர்ந்திருக்கும் இருக்கையை தலையில் குடை போல் துாக்கி வைப்பர்; அப்படியே நடையையும் கட்டுவர்.வந்திருந்த முருக பக்தர்களுக்கென தனிப்பட்ட அரசியல் இருந்தாலும், தலைவர்களை வாழ்த்தி கூக்குரல் இல்லை; கோஷம் இல்லை. அரங்கில் கூச்சல் இல்லை. தலைவர்களை வரவேற்று பேனர்,பிளக்ஸ் இல்லை.
சில கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் காட்ட, உள்ளூர் நிர்வாகிகள் பணம் தந்து பார்வையாளர்களை அழைத்து வருவர். இங்கு வந்தது தானாக சேர்ந்த கூட்டம்.பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு அனுமதி இல்லை; மறுசுழற்சி கப்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. எனவே, மைதானம் எங்கும் பிளாஸ்டிக் கழிவுகளே இல்லை.
நிகழ்ச்சி முடிந்ததும் இருக்கைகளை அடுக்கி வைத்து செல்லவும், குப்பைகளை பொறுக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எல்லோரும் அதை பின்பற்றியதால், நேற்று காலையில் மைதானம் சுத்தமாக பளிச் என, இருந்தது. ஆனால், சில கட்சிகளின் மாநாட்டு குப்பை இரண்டு நாட்கள் மைதானத்தில் கிடக்கும். உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள்தான் வந்து அகற்றுவர்.
இப்படிப்பட்ட மாநாடு முடிந்த நிலையில் அதற்கடுத்து எடுத்த சர்வேயில் தமிழகம் முழுவதும் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 70 சதவீதத்துக்கும் மேல் இளைஞர்கள்இந்த ரிப்போர்ட் தான் திமுகவை கதிகலங்க செய்துள்ளது. விஜயை வைத்து இளைஞர்களை ஓட்டுக்களை பிரித்து விடலாம் என நினைத்த திமுகவுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.