
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதேபோல் சிக்கந்தர் அவுலியா பாதுஷா பள்ளி வாசலில் திருமாவளவன் வழிபாடு செய்தார்அப்போது முருகனை தரிசனம் செய்த திருமாவளவன் நெற்றியில் திருநீர் பூசிக்கொண்டார். அதன்பிறகு நெற்றியில் திருநீருடன் திருமாவளவன் கோவிலில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் கோவில் வளாகத்தில் ஒரு தம்பதி, திருமாவளவனை பார்த்து ‛செல்பி' எடுக்க விரும்பினர். இதையடுத்து அவர்களின் செல்போனை வாங்கிய திருமாவளவன் கேமராவில் தனது முகத்தை பார்த்து நெற்றியில் இருந்த திருநீரை கையால் அழித்தார். அதன்பிறகு அவர் தம்பதியுடன் சேர்ந்து ‛செல்பி' எடுத்துவிட்டு செல்போனை அவர்களிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றார்.
திருமாவளவன் நெற்றியிலிருந்த திருநீறை அழித்த வீடியோ வைரலான நிலையில், அவரது இந்த நடவடிக்கைக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்தனர்.“திருநீறை நெற்றியில் வைத்துக்கொண்டுதான் வெளியில் வந்தேன். சுமார் அரை மணி நேரம் வரை திருநீறு வைத்திருந்தேன். அவ்வளவு நேரம் இருந்ததை நீங்கள் யாரும் பார்க்கவில்லையா? நாள் முழுவதும் திருநீறை நான் வைத்துக்கொண்டு இருக்க முடியுமா? ” என்று கேட்டார். இந்த நிலையில் தான் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல லட்சக்கணக்கான இந்து மக்கள் கலந்து கொண்டார்கள். முருகர் பக்தர்கள் மாநாட்டில் பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திருமாவளவன் திருநீறை அழித்த விஷயத்தை அந்த மாநாட்டில் பேசினார். இதனை தொடர்ந்து திருமாவுக்கு சொந்த கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்த்து அலறியடித்து திருநீறு விஷயமாக மீண்டும் வீடியோ வெளியிட்டார் திருமா. இதில் பேசிய திருமா எந்த உள்நோக்கமும் இல்லாமல் நெற்றியை சரிசெய்தேன் துடைத்தேன் எனவும் இதில் திருநீற்றினை அழிக்கவில்லை என வீடியோ வெளியிட்டார் ஒரே நாளில் பல்டி அடித்துள்ளார் திருமா முதலில் நாள் முழுவதும் திருநீறை நான் வைத்துக்கொண்டு இருக்க முடியுமா? என கேட்ட திருமாவளவன் முருகன் பக்தர்கள் முடிந்த கையேடு எந்த உள்நோக்கமும் இல்லாமல் நெற்றியை சரிசெய்தேன் என பதுங்கியுள்ளார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்,அக்கட்சி தலைவர் திருமாவளவன்பேசிய கருத்துகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக திமுக அரசியல் சார்ந்த பேச்சு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விசிக இயக்கம் அமைத்து இருப்பது நாடாளுமன்ற, சட்டமன்ற சீட்டுகளுக்கு பேரம் பேசுவதற்கு அல்ல. நான் திடீரென தேர்தல் பாதையேயே வேண்டாமென்று சொன்னாலும் சொல்லுவேன். என்றாவது ஒருநாள். இவர்கள் நம்மை சராசரியாக எடைபோடுகிறார்கள். இந்த சீட்டுக்காக, நோட்டுக்காக, பிளாஸ்டிக் சேர்.. இவர்களது புத்தி அவ்வளவு தான்.அவர்கள் தான் அப்படி ஒரு மதிப்பீட்டை கொண்டுள்ளனர்.
விசிகவை, டீ, பன் கொடுத்து ஏமாற்றலாம் என கணக்குப் போடாதீர்கள். 10 தொகுதிகளுக்கு மேலே தரமாட்டோம் என கூறுவதெல்லாம் உங்களது மதிப்பீடு. ஆனால், விசிக 234 தொகுதிகளுக்கு தகுதியானது. அந்த வலிமை எங்களுக்கு உள்ளது. ஆளும் திமுக கூட்டணியில் இருந்து கூட நாம் கொடியேற்ற, பேனர் கட்ட, பொதுக்கூட்டங்களை நடத்த போராட வேண்டியுள்ளது” என திருமாவளவன் பேசியுள்ளார்.திமுக அமைச்சரை சந்தித்தபோது திருமாவளவன் அமர பிளாஸ்டிக் சேர் வழங்கப்பட்டது பெரும் பேசுபொருளானது. தேர்தல் நெருங்குவதால் திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து கூடுதல் தொகுதிகளை பெறவே, விசிக இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக திமுகவினர் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.