24 special

எதிரிகளை அழிக்கும் வராகியை இப்படி வழிபடுங்க.... பின்பு பாருங்க

VARAHI AMMAN
VARAHI AMMAN

 நவகிரகங்கள் உருவாகுவதற்கு முன்பே தோன்றிய இந்த சப்த கன்னிகள்.இவங்க தாய் தந்தை இல்லாமல் கன்னி தெய்வங்களாகவே பிறந்தாங்க.. பார்வதி தேவி அரக்கர்களை கொள்வதற்காக இந்த ஏழு கன்னிகளை  உருவாக்கினார்கள்.. அதுல ஐந்தாவது பிறந்தவங்க தான் நம்ம வராகி அம்மன்..இந்த அம்மன் அழகான பெண்ணின் உடலையும் காட்டுப்பன்றி முகத்தையும் கொண்டவர் வராகி அம்மன் சாதாரணமாக கிடைக்கிறது எல்லாத்தையும் சாப்பிட மாட்டாங்க பூமிக்கு அடியில விளைகிறத மட்டும் தான் சாப்பிடுவாங்க.. இவளோட உருவ தோற்றத்த வச்சு அம்மன் உக்கிரமான தெய்வம் அப்படின்னு எல்லாரும் நினைச்சுகிட்டு இருப்பாங்க ஆனா பக்தர்களை மேல பாசம் காட்டுறதுலையும் அவங்க கேட்ட வரங்களை அள்ளித் தருவதிலும் வராகி அம்மனுக்கு நிகர் வேற எந்த தெய்வமும் இல்லை அம்மனோட ரதம் கிரிச்சக்கரம். பஞ்சமி திதியில் பிறந்ததுனாலயும் ஐந்தாவது பிறந்ததுனாலயும் பஞ்சமி திதியில் இவளை வழிபட்டு வந்தா நமக்கு வேண்டுன வரம் கிடைக்கும்..


ராஜராஜ சோழன் இஷ்ட தெய்வமாக வராகி அம்மன் இருந்துள்ளார் இவர் எப்பொழுது போருக்கு சென்றாலும் வராகி அம்மனை வழிபாடு செய்யாமல் செல்வதில்லை உலகமே வியந்து பார்க்கிற அளவுக்கு சிவனுக்கு கோவில் கட்ட ராஜ ராஜ சோழன் நினைத்தார்... சிவனுக்கு ஆலயம் எழுப்புவதற்காக உலகம் முழுவதும் இடங்களைத் தேடித் திரிந்தார் ராஜராஜ சோழன். அப்பொழுது எந்த இடமுமே அமையவில்லை உடனே ராஜராஜ சோழன் கனவில் வராகி தோன்றி நாளை நானே உனக்கு வழிகாட்டுகிறேன் என்று சொன்னாளாம்.மறுநாளும் அதே போல ராஜ ராஜ சோழன் செல்லும் பொழுது ஒரு பன்றி உருவத்தில் வந்து வழி காட்டினாளா அப்பொழுது ஒரு  நிலத்தில்  கால் நகங்களால் கீறி இந்த இடத்தில் கோவில் கட்ட சொன்னாளாம் இதனால தான் வராகி அம்மன முதற்கடவுளா இராஜராஜ சோழன் வழிபட்டார். வராகி அம்மன் காளியோட அம்சமா இருக்கு அதனால அவர வழிபடுறவங்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரி தொல்லைகளை இருக்காது வராகி அம்மனுடைய மூல மந்திரத்தை 1008 முறை 48 நாட்கள் சொன்னால் அவருடைய முழு அருளையும் பெறலாம்..

 அதிக கஷ்டத்தில் உள்ளவர்கள் வராகி அம்மனை எப்படி வழிபடுவது பஞ்சமி தினத்தில் கோவிலிலோ அல்லது வீட்டில் அம்மாவுடைய திருவருள் படத்திற்கு முன்பு வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி தேங்காய் எண்ணெய் ஊற்றி சிகப்பு திரி போட்டு சிகப்பு நிற மலர்கள் வைத்து அவளுக்கு விருப்பப்பட்ட மண்ணில் விளையும் பொருட்களை வைத்து வழிபடலாம் இவ்வாறு வழிபடுவதன் மூலம் நமது கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்..எந்தெந்த கிழமைகளில் வழிபட்டால் என்னென்ன பலன் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டால் உடல் நோய்கள் எல்லாம் தீரும் திங்கள் கிழமை மனநல பாதிப்பு நீங்கும் செவ்வாய்க்கிழமை வீடு நில பிரச்சனைகள் தொடர்பானவைக்கு வழிபடலாம் கடன் தொல்லை குழந்தை பேரு கல்வியில சிறந்து விளங்க புதன்கிழமையும் வியாழக்கிழமையும் வழிபடலாம் வெள்ளிக்கிழமை வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்... சனிக்கிழமை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்