Tamilnadu

டெல்லியில் இருந்து திரும்பிய டிஜிபி உத்தரவு அண்ணாமலை வரவேற்பு நடந்தது என்ன?

Anamalai and DGp
Anamalai and DGp

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக காவல்துறையினருக்கு புது வருட பிறப்பு வாழ்த்து தெரிவித்து இருந்ததுடன் சில அறிவுரைகளையும் வழங்கி இருந்தார் காவல்துறையினருக்கு எழுதி இருந்த கடிதம் பின்வருமாறு :- 2021-ம் ஆண்டு பல்வேறு சவால்களை தமிழக காவல்துறை தைரியமாக எதிர்கொண்டது. ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மதுரை சித்திரை திருவிழா, திருவண்ணாமலை தீபம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளை அமைதியான முறையில் நடத்தி முடித்துள்ளோம். சட்டம் ஒழுங்கு திறம்பட பேணி காக்கப்பட்டது. குற்றப்புலனாய்வு மெச்சத்தகும் வகையில் இருந்தது. இவை அனைத்துக்கும் காரணம் காவல்துறையில் உள்ள அதிகாரிகள், ஆண், பெண் காவலர்கள் தான்.இவர்களின் அர்ப்பணிப்பு, அனைத்து சூழ்நிலையிலும் அரண்போல நின்றதாலேயே சாத்தியமானது.


‘ஆபரேஷன் ரவுடி வேட்டை’ தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதி தொடர்பான கொலைகளில் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். பழிக்குபழி வாங்கும் ரவுடிகளின் அட்டகாசத்தை `ஆபரேஷன் ரவுடி வேட்டை' என்ற பெயரில் ஒடுக்கி வருகிறோம். அதன் விளைவாக தமிழகம் முழுவதும் கடந்த 2021-ல் 3,325 ரவுடிகளை கைது செய்துள்ளோம். 1,117 அபாயகரமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளோம். போதைப்பொருளுக்கு எதிராக `Drive against Drugs (DAD)' என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 23 டன் கஞ்சா, 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்துள்ளோம். 2-வது அலையில் மட்டும் கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு 139 காவல் துறையினரை இழந்துள்ளோம். காவல்துறையினரின் 1,067 வாரிசுகளுக்கு தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிபெற்று கொடுக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையின் பேரில் 1,500 பேருக்கு காவல் துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது.

வருத்தமளிக்கும் செயல்கள் பொதுமக்களின் மத்தியில் சிலகாவல்துறையினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை, குறிப்பாக விசாரணையின்போது நடக்கும் வன்முறைகள் வருத்தமளிக்கின்றன.நடந்த குற்றங்களில் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார்கள் வருகின்றன. முழுமையானஒருமைப்பாடு, தனிப்பட்ட தைரியம், கண்டிப்பான முகம் மற்றும் தொழில் ஒழுக்கம், நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்மாதிரியாக வழிநடத்துவது ஒவ்வொரு பிரிவு அதிகாரியின் பொறுப்பாகும். தமிழக காவல்துறையின் கண்ணியம் குறையும் வகையில் அதிகாரிகள் யாரும் செயல்படக்கூடாது.

இந்தாண்டு கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்பது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சாலை விபத்துகள், சைபர் கிரைம் குற்றங்கள் போன்றவை குறிப்பிட்ட சவாலாக இருக்கும். குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம், காவல்துறையினருக்கு எதிராக தவறான பரப்புரைகளுக்கு எதிராக செயல்படுவோம். இவ்வாறு கடிதத்தில் டிஜிபி குறிப்பிட்டு இருந்தார்.

டிஜிபி எழுதிய கடிதத்தில் கடைசி பாரா மிகவும் முக்கியமானதாக பார்க்க படுகிறது சில காவல்துறையினரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனவும், நடந்த குற்றங்கள் மீது வழக்கு பதியவில்லை என்ற குற்றசாட்டு எழுகிறது எனவும் குறிப்பிட்டு இருந்தார் சைலேந்திரபாபு. இது தமிழக காவல்துறை மீது அண்ணாமலை சொல்லிய குற்றசாட்டு ஆகும் அதாவது பாஜக மற்றும் தேசியவாதிகள் மீது வழக்கு பதிந்து கைது செய்யும் காவல்துறை, ஆளும் கட்சியான திமுகவினர் தவறு செய்தால் போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை என குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

இதைத்தான் சைலேந்திரபாபு தற்போது கடிதம் மூலம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் சைலேந்திரபாபு அறிக்கையை அண்ணாமலை வரவேற்பதாகவும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருந்தார் சமீபத்தில் டெல்லி சென்று திரும்பிய டிஜிபி நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் இருப்பதாகவும் இனி வரும் காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.