Cinema

இந்த முறை சிக்கினார் "விஜய் சேதுபதி".. வெளிவர இருக்கும் பரபரப்பு தகவல் !

vijaysethupathi airport
vijaysethupathi airport

நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கிய சூழலில் நடந்தது என்ன என்பது குறித்து பல்வேறு ஊடகங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்தன. இறுதியில்தான் தெரிந்தது இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே மகா காந்தி என்பவர் விஜய் சேதுபதியை தாக்கியதாக தானே முன் வந்து தெரிவித்தார்.


இந்நிலையில் இன்று சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் மகா காந்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதால் எதிர்  தாக்குதல் நடத்தியவர் இந்த மகா காந்தி.அது தொடர்பான  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

படபிடிப்புக்கு சென்ற விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு  பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய் சேதுபதியை தாக்கிய மகா காந்தி என்ற நபர் தற்போது, விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளர் ஜான்சன் மீது வழக்கு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பவும், 294(b),323,500 மற்றும் 506(பி), 323,500 மற்றும் 506 இன் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்றும் மனுவில் மகா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார், தான் தாக்கப்பட்ட நிலையிலும் அமைதியாக இருந்த விஜய் சேதுபதி, இந்த முறை நீதி மன்றத்தில் கட்டாயம் பதில் அளித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய் சேதுபதி இருப்பதால் என்ன நடந்தது என்ற உண்மை வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.