Tamilnadu

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய இளைஞர்!! பொறுத்துப்பொறுத்து பார்த்து அந்தப் பெண் செய்த அதிரடி சம்பவம்!!

marriage
marriage

தற்போது ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பேசுவது எவ்வளவு எளிதாகிவிட்டதோ அவ்வளவு கடினமானது ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பேசுவது நம் பெற்றோர்களின் இளமைக் காலத்தில், அதைவிட மிகவும் கடினமானது நம்முடைய பாட்டி தாத்தாவின் இளமை காலத்தில் ஆனால் அன்று காதல் இருந்ததா அல்லது இல்லையா என்று பார்த்தால் இருந்திருக்கிறது இன்றளவும் காதல்தான் பல இடங்களில் ஆட்சி செய்து வருகிறது. அப்படி காதலித்து தன் மனதளவில் பிடித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு ஒரு ஆண் பெண் வந்து விட்டார்கள் என்றால் அவர்கள் தங்கள் பெற்றோர்களின் அனுமதி பெற்று திருமணம் செய்து கொள்கிறார்கள் அல்லது பெற்றோர்களின் விருப்பத்தையும் மீறி வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்கிறார்கள் அப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் மகிழ்ச்சியாக சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்றால் பெண்களும் சில காலத்திற்கு பிறகு அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.


ஆனால் இக்காலத்தில் நடக்கின்ற காதலை பார்க்கும் பொழுது மிகவும் விசித்திரமாகவும் ஒரு பயத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் இருக்கிறது ஏனென்றால் ஒன்று மற்றும் இரண்டாம் பகுப்பு படிக்கும் குழந்தைக்கு கூட பாய் பிரண்ட் கேர்ள் பிரண்ட் இருக்கிறது அதிலும் ஏதேனும் சண்டை ஏற்பட்டால் பிரேக் அப் செய்து விடுகிறார்கள் இதே நிலைமை இளைஞர்களுக்கும் தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் அந்த பிரேக்கப் ஆனது இருவரது புரிதலாலும் நடக்கும் ஆனால் பலரது விஷயங்களில் ஆண் பெண் இருவரில் ஒருவரால் மட்டுமே அந்த பிரேக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியும் மற்றொருவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். இப்படி ஒரு பக்கம் காதல் இருக்கிறது என்று பார்த்தால் மறுபக்கம் காதலித்து விட்டு திருமணம் செய்வதாக கூறி பிறகு ஏமாற்றி அந்தப் பெண்ணையும் ஆணையும் கைவிடுவதும் அதிகமாக நடக்கிறது. 

அந்த வகையில் இதுபோன்ற ஒரு செய்தி தற்போது வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த சூர்யா மற்றும் அருண்குமார் இருவரும் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளனர். சூர்யா தனியார் மருந்து நிறுவனத்திலும், அருண்குமார் தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் நன்கு பழக்கமானவர்களாக இருந்துள்ளனர். மேலும் இவர்கள் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சென்னை குன்றத்தூரில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சூர்யா கர்ப்பமானதாக  சென்னை குன்றத்தூரில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர் கூறப்படுகிறது. 

அப்போது அருண்குமார் சூர்யாவிடம் நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்தியுள்ளார் சூர்யாவும் அருண்குமாரின் பேச்சை கேட்டு கர்ப்பத்தையும் கலைத்துவிட்டு பிறகு ஊருக்கு இருவரும் திரும்பி வரும்பொழுது பெற்றோர்களிடம் அனுமதி பெற்று திருமணம் செய்து கொள்வதாக அருண்குமார் கூறியுள்ளதை நம்பி இருந்த சூர்யாவிற்கு அருண்குமார் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். அதாவது சூர்யாவை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணைப் பார்த்து அவருடன் நிச்சயம் வரையும் சென்றுள்ளார் அருண்குமார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சூர்யா அருண்குமாரின் வீட்டின் முன்பே தற்கொலை செய்து கொள்ள முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அருண்குமாரின் பெற்றோர்கள் சூர்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு சமூக வலைதளங்களில் இதுபோன்ற சம்பவங்களாலே பெற்றோர்களால் காதல் திருமணத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளாத நிலை இன்றளவும் நீடித்து வருகிறது என கமெண்டுகள் முன் வைக்கப்படுகிறது.