Tamilnadu

"பாடல்" மாதிரி தெரியலையே "எச்சரிக்கை" மாதிரில இருக்கு பங்கம் செய்த பேராசிரியர்!

Stalin and Uthayanithi - collaboration
Stalin and Uthayanithi - collaboration

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மஞ்சநாயக்கன் பட்டியில், பாஜக அலுவலகம் திறக்கப்பட்டது, இந்த அலுவலகத்தையும் மற்றும் பாஜக நிர்வாகிகளையும் திமுகவினர் கடுமையாக தாக்கியுள்ளனர், இந்த தாக்குதலுக்கு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி உடந்தையாக இருந்துள்ளதாக பாஜகவினர் குற்றசாட்டு வைத்தனர், இதனை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நேற்று ஒட்டன்சத்திரத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க மாநில பொது செயலாளர் பேராசிரியர் "இராம ஸ்ரீநிவாசன்" தலைமை வகித்தார்.


ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தொண்டர்கள் மத்தியில் பேராசிரியர் பேசும்போது, திமுக என்றாலே அராஜகம், திமுக என்றாலே ரவுடித்தனம், திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்து ஆனால் ஒரு விஷயத்தை திமுக மறந்துவிட்டது திமுக என்றாலே எதிர்ப்பு.

திமுக என்ற உன்னை அரசியலில் துடைக்கப் போகின்ற கட்சி பாஜகதான், சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் சரி திமுக திமுகவுக்கு எதிர்கட்சி பாரதிய ஜனதா கட்சிதான், 6 முறை சட்டமன்ற உறுப்பினர் இருக்கட்டும்… இருக்கட்டும்…அதனால் என்ன.? ஒரு முறை அமைச்சரும்,  சரி அதனால் என்ன.? நீ ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக, ஒருமுறை அமைச்சராக இருந்தாலும், திருடனை திருடன் என்று சொல்லக்கூடிய ஒரே கட்சி பாஜகதான்.

எங்களுக்கு உங்களை மாறி காசு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை, உங்களை மாதிரி மனைவி, துணைவி என வைத்துக் கொள்ள ஆசை இல்லை, உங்களை மாதிரி வெள்ளையும் சொள்ளையுமா தெரிய வேண்டும் என்ற ஆசை இல்லை, நாங்கள் இந்த தேசத்திற்காக வாழ்கின்றோம் இந்த சமுதாயத்திற்காக இந்த மக்களுக்காக இருக்கின்றோம்,

அதற்கு பாதிப்பு என்றால் தொடர்ந்து குரல் கொடுப்போம்,தற்போது பழனியில் நாம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தேனி, விருதுநகர், மதுரை என பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் கண்டனம் நடைபெற்று வருகிறது. இது புது மாற்றம் இனி பாஜகவினர் எங்கே கைது செய்யப்பட்டாலும் தமிழகம் முழுவதும் அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கும், எனக்கு சிவாஜி கணேசன் பாடல் தான் ஞாபகத்துக்கு வருது, அந்த பாடலில், தூங்காத கண்ணென்று ஒன்று .. யார் தெரியுமா.?

ஸ்டாலின் இன்னும் ஐந்து வருடங்களுக்கு அவர் தூங்க முடியாது.துடிக்கின்ற மனம் என்று ஒன்று… அது உதயநிதி ஸ்டாலின், நம்ம முதலமைச்சர், ஆவோமா வேண்டாமா என துடித்துக் கொண்டிருக்கிறார், அடுத்த வரி என்ன.? தாங்காத மனமென்று ஒன்று… அது யாரு ஒட்டுமொத்த திமுக மற்றும் சக்கர பாணி உட்பட, தாங்காத மனமென்று திமுக தயாராக இருங்க, அடுத்த 5 வருடங்களுக்கு உங்களை தூங்க விட மாட்டோம், ஊழல் செய்ய விடமாட்டோம் அதற்காக மட்டும்தான் அரசியல் அவதாரம் எடுத்து எடுத்துள்ளோம் என பேராசிரியர் "இராம ஸ்ரீனிவாசன்" தெரிவித்துள்ளார்.

ஒரே பாடலில் முதல்வர், ஸ்டாலின், உதயநிதி, அமைச்சர் என அனைவரையும் உவமை கூறி வெளுத்து எடுத்துள்ளார் பேராசிரியர் இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்தால் பாடல் வரிகள் போல் இல்லாமல் இனி வரும் காலங்களில் என்ன நடக்கும் என எச்சரிக்கை போல் அல்லவா இருக்கிறது உண்மையான எதிர்க்கட்சியாக பாஜக அனைத்து இடங்களிலும் களத்தில் இறங்கி அடிப்பது பேராசிரியர் பேச்சின் மூலம் உறுதிபட தெரிவிப்பதாக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். credit - தினசேவல்