Tamilnadu

அருணன் கேள்வி கேளுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா? முதல் நாளே கடையை சாத்த அட்டகாசம் !

arunan
arunan

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேராசிரியர் அருணன் தான் புதிதாக தொடங்கியுள்ள யூடுப் சேனல் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து உங்களுக்கு என்ன கேள்விகள் கேட்க தோன்றுகிறதோ அதை கமெண்ட்டாக பதிவு செய்யுங்கள், நான் அதற்கு வீடியோவில் பதில் அளிக்கிறேன் என தெரிவித்தார்.


அவ்வளவுதான் எங்குதான் இருந்தார்களோ அத்தனை ட்விட்டர் வாசிகள், நேரடியாக அருணனின் ட்விட்டிற்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர், அவர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் அருணன் கடையை சாத்திவிட்டு பதில் அளிக்க முடியாத அளவிற்கு நக்கலாகவும், நையாண்டியாகவும், குதர்க்காமகவும் இருக்கிறது. அதில் சில உங்கள் பார்வைக்கு :-

உங்கள் கட்சியை அடகு வைத்து திமுகவிடம் வாங்கிய 25 கோடியை என்ன செய்தீர்கள்??? என ரமேஷ் தமிழன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார் ,  முகமது பின் துக்ளக் 2.0 #ஜெய்ஹிந்த் என்ற நபர் "சரி அவரே கேட்க சொல்லுறாரு கேட்போம் எப்படி சார் வேலை வெட்டிக்கு போவாம குடும்பத்த மெயின்டன் பன்னுறீங்க.இவளோ வருசமா?." என நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார் .உங்களது கம்யூனிஸ அரசியல் திராவிட அரசியலோடு கரைந்தது ஏன் எப்படி. என பாலாஜி எத்திராஜ் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார் .

100கோடி தடுப்பூசி போட்டதற்கு உலக நாடுகளே நம் நாட்டைப் பாராட்டியபோது "மோடி தற்பெருமை பேசுகிறார் " என்றீர். ஆனால் அறிவாளித்தனமாய் நீங்க பதில் கூறுவதாக நீங்கள உமக்காக விளம்பரம் செய்வதுதானே தம்பட்டம்? என தமிழ் அமுதன் என்பவர் குறிப்பிட்டுள்ளார் , சார் நீங்க வெறும் அருணனா இல்ல அப்பாடக்கர் அருணனா  nkkraj என்பவர் குறிப்பிட்டுள்ளார் .இடதுசாரி சித்தாந்தங்களை இளைஞர்களிடம் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள் என்ன? என நடராஜன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார் .

கேட்பது ஒன்றே ஒன்று தான். பூரண உடல் நலத்துடன் இருந்து, இறுதி வரை Content குடுத்து எங்களை சந்தோஷப் படுத்திக் கொண்டிருங்கள்.  எங்களுக்கும் போர் அடிக்கும்ல என நக்கலாக குறிப்பிட்டுள்ளார் வெங்கட்ரமனி என்பவர் . திமுகவிடம் வாங்கிய 10கோடிக்கு ஏன் இதுவரை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எந்தவித கணக்கையும் பொதுவெளியில் கொடுக்கவில்லை???அப்போ உங்களின் கட்சியை நீங்கள் திமுகவிடம் அடகுவைத்துவிடீர்கள் என்பது உண்மைதானே???உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.நேரடி பதில்வேண்டும் மழுப்பல்கள் கூடாது. என முருகன் ரமணி என்பவர்  கேள்வி எழுப்பியுள்ளார் .

லீலாவதி குடும்பத்தினரை பக்கத்தில் வைத்துக்கொண்டு திமுக ஆதரவோடு மதுரையில் கம்யூனிஸ்ட் போட்டியிட்ட போதும் , மற்ற இடங்களில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் போதும் உறுத்தல் கிருத்தல் ஏதும் இல்லையா ? என ரவிசங்கரின் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார் , 100 ல் 98 கமெண்டுகள் அருணனை கடுமையாக காட்சி எடுக்கும் வகையிலேயே இருக்கின்றன , நிச்சயம் அருணன்  இந்த கேள்விகளுக்கு பதில் அளித்தால் தொடங்கிய அன்றே கடையை மூடும் நிலை உண்டாகலாம் ஒரு மனுஷன் கேள்வி கேட்க சொன்னால் இப்படியா கேள்விகளை அடுக்குவது , அருணின் நிலை பரிதாபம் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர் .