Tamilnadu

எல்லா மாநிலத்திலும் கட்சி மூழ்கிட்டு கிடக்கு..! அத பத்தி கவலை இல்லாம பேச்சப்பாரு ! முகநூலில் தாக்கப்பட்டார் சிதம்பரம் !

Chithaparam
Chithaparam


தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் திறக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவை கிண்டல்  செய்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  "கட்சி எழும்புகிறதோ இல்லையோ கட்டிடங்கள் எழும்புகின்றன. நான்கு நகரங்களில் மாவட்ட கட்சியின் புதிய பெரும் மதிப்புள்ள அலுவலக கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்கு பாராட்டுக்கள்" என கிண்டல் செய்யும் விதமாக குறிப்பிட, அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி. அதிலே தத்தளித்து இலக்குத் தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள், உங்களுடைய நகைச்சுவையை தாண்டி நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும், தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி" என குறிப்பிட்டு உள்ளார். 


இதற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் பாஜகவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதேவேளையில் சிதம்பரத்தின் கருத்துக்களுக்கும் அவரது ஆதரவாளர்கள் ஆதரவாக பதிவிட்டு இருக்கின்றனர். இதையெல்லாம் தாண்டி முகநூல் பக்கத்தில் ஒருவர் எல்லா மாநிலங்களிலும் கட்சி மூழ்கிப் போய் கிடக்கு அதை நினைத்து கவலைப் படாமல் பெரிய அப்புச்சிக்கு பேச்சப்பாரு என கிண்டல் செய்து இருவரின் தொடர் பதிவுகளையும் குறிப்பிட்டு மீம்ஸ் போட்டு பதிவிட்டுள்ளார்.


இவருடைய இந்த பதிவு, காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் வலுவிழந்து வருகிறது. மற்ற கட்சிகளில் இருந்தும் பல முக்கிய புள்ளிகள் தங்களது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைகின்றனர். ஆக மொத்தத்தில் பாஜக படு வேகமாக  வளர்ந்து வருகிறது என்பது தான் உண்மை என விளக்குவதாக  அமைந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் கட்சியை பற்றி சிறிதும் கவலை இல்லாமல், தமிழக பாஜக பற்றி பேசி, கிண்டல் செய்வதால் என்ன நடக்க போகிறது என்ற பாணியில் முகநூலில்  தாக்கப்பட்டு சிதம்பரம்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.