Cinema

தொடங்கியது கிரிக்கெட் போட்டி... சூர்யா, சச்சின் கண்கொள்ளா காட்சியாக மாறிய ஆட்டம்..!

Surya, Sachin
Surya, Sachin

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா சமீப மாதமாக தமிழ்நாட்டில் இருந்து மும்பையில் வசித்து வந்த சூர்யா கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக ஐஎஸ்பில் (ISPL) எனப்படும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை வாங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இதனை ஒரே அவரது இணைய பக்கத்தில் தெரிவித்தார். இந்நிலையில் அந்த போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நடிகர் சூரிய மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் என பலரும் கலந்துகொண்டு விளையாடியது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


டி20 கிரிக்கெட் போட்டிகளின் அடுத்த வெர்சனாக டி10 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 ஓவர்கள் மட்டுமே நடத்தப்படும் இந்த வகையான டி10 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபலமாக நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் இந்த போட்டி மும்முரம் காட்டி வருகிறது. இதில் சினிமா நட்சத்திரங்கள் யாரும் விளையாடுவதில்லை. அதற்கு மாறாக உள்ளுரில் கிரிக்கெட் போட்டியில் திறமையான வீரர்களை கொண்டு நடந்தப்படும் போட்டி. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இத்தொடரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் மும்பையில் நேற்று ஐஎஸ்பிஎல் எனப்படும் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தொடர் நேற்று தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மஜி மும்பையின் உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சென்னை சிங்கம்ஸ் அணியின் உரிமையாளர் சூர்யா உள்ளிட்டோர் ஆரம்ப போட்டியில் நட்பு ரீதியாக கிரிக்கெட் விளையாடினர். அப்போது, சச்சின் டெண்டுல்கர் பந்து வீச அதனை சூர்யா அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் பந்து இல்லாமல் டென்னிஸ் பாலில் 10 இவர் போட்டி நடைபெறவுள்ளது. 

ராம்சரண் தெலுங்கு அணியின் உரிமையாளராக உள்ள நிலையில், அறிமுக நிகழ்ச்சியில் சூர்யாவுடன் இணைந்து நாட்டுக் கூத்து பாடலுக்கும் அவர் நடனமாடியது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. இதில் சுரேஷ் ரெய்னாவும் பங்கேற்றது தமிழ் ரசிகர்களிடம் மகிழ்ச்சியாக கொண்டாடி இணையத்தில் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். தனியார் தொலைக்காட்சியில் இந்த போட்டி ஒளிபரப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா தற்போது மும்பையில் தனது குழைந்தைகளுடன் இருந்து வருகிறார். கங்குவா, புறநானுறு போன்ற படங்களில் கமிட் ஆகியுள்ளார். தெடர்ந்து பாலிவுட் இயக்குனர்களிடம் அடுத்த படத்தை தேர்வு செய்து வருகிறார் என்பது கூடுதல் தகவலாகும்.