24 special

திமுக தலைவர் தலையில் பேரிடியை இறக்கிய அமைச்சர்! திருச்சியில் உடைந்த திமுக! உறுதியானது விஷயம்! அதிர்ந்த ஸ்டாலின்“

Kn nehru ,anbil mahes
Kn nehru ,anbil mahes


2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக வியூகங்கள் வகுத்து வருகின்றன. ஆளும் திமுகவை பொறுத்தவரை 8 மண்டல செயலாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதுஇந்த நிலையில் உட்கட்சி பூசலும் அதிகமாகியுள்ளதால் என்னசெய்வதென்று பபுரியாமல் முழித்து கொண்டுள்ளாராம் திமுக தலைவர் முக.ஸ்டாலின். ஒருபக்கம் உதயநிதி,கனிமொழி என் குடும்ப பிரச்சனை, அமலாக்கத்துறையின் கிடுக்குபிடி, தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என தலைக்கு மேல் பிரச்சனையை வைத்து கொண்டு வெளியில் தெரியாமல் இருக்க போட்டோ சூட் ஊட்டி சுற்றுலா பயணம் அவ்வப்போது ஊடங்களில் பேசுவது, கட்சி மீட்டிங்,என பிசியாக காட்டி கொள்கிறார் முதன்மையானவர்.  



இந்த நிலையில் இன்னொரு தலைவலியை கொடுத்துள்ளார்கள் திருச்சி திமுகவினர். நேரு கோஷ்டி, அன்பில் மகேஸ் கோஷ்டி என இன்னமும் தாமரை இலை தண்ணீராகவே நிற்கிறார்கள் உடன்பிறப்புகள். ஒரு காலத்​தில் திருச்சி மாவட்ட திமுக என்​றால் அது கே.என்​.நேரு​வின் முக​மாக மட்​டுமே இருந்​தது. ஒன்​று​பட்ட திருச்சி மாவட்​டத்​துக்கே செய​லா​ள​ராக இருந்த நேரு, மாவட்ட திமுக-வை தனது கண்​ணசை​வில் வைத்​திருந்​தார். அதன் பிறகு அன்​பில் மகேஸ் அவருக்​குப் போட்​டி​யாக மாவட்ட திமுக-​வில் தலை​தூக்க ஆரம்​பித்​தார். இதனால் நேருவை பிடிக்​காதவர்​கள் எல்​லாம் மகேஸ் பக்​கம் அணிவகுத்​தார்​கள். மகேஸ் தலை​மைக்கு நெருக்​க​மான இன்னொரு பிள்​ளை​ போல்  இருந்​த​தால் அவரது வளர்ச்​சியை நேரு​வால் தடுத்து நிறுத்த முடிய​வில்​லை. அதேசம​யம் கள வீர​ரான நேரு​வை​யும் தலை​மை​யால் ஒதுக்கி வைக்கவும் முடிய​வில்​லை. இதனால் கோஷ்டி பூசல் நாளொரு மேனியாய் வளர ஆரம்​பித்​தது.


ஒரு கட்​டத்​தில் நேரு திமுக-​வின் முதன்​மைச் செய​லா​ளர் அந்​தஸ்​துக்கு உயர்ந்​த​தால் தலை​மைக்​கழக நிர்​வாகி​களில் ஒரு​வ​ரா​னார். அதே​போல் திருச்சி மாவட்ட திமுக மூன்​றாக பிரிக்​கப்​பட்டு தெற்கு மாவட்​டத்​துக்கு அன்​பில் மகேஸ் செய​லா​ள​ரா​னார். கூட​வே, தேர்​தலில் வெற்​றி​பெற்று நேரு​வுக்கு நிக​ராக அமைச்​சரும் ஆனார்.


நேரு தலை​மைக் கழக நிர்​வாகி​யாகி​விட்​ட​தால் இனி திருச்சி திமுக முழு​மை​யாக மகேஸ் கட்​டுப்​பாட்​டுக்​குள் போய்​விடும் என பலரும் எதிர்​பார்த்​தார்​கள். ஆனால், அப்​படி நடக்​காமல் திருச்சி வடக்​கு, மற்​றும் மத்​திய மாவட்​டங்​களை தனது பிடிக்​குள் வைத்​துக்​கொண்​டார் நேரு.  இதனால், கோஷ்டி பூசல் உச்​சமடைந்தது.இந்த நிலை​யில், அமைச்​சர் நேரு​வின் சொந்​தத் தொகு​தி​யான திருச்சி மேற்​கில் உள்ள எடமலைப்​பட்​டிபுதூரில் கட்​டி​முடிக்​கப்​பட்ட மாநக​ராட்சி உயர்​நிலைப் பள்ளி கட்​டிட திறப்பு விழா கடந்த 4-ம் தேதி நடை​பெற்​றது. அமைச்​சர்​கள் நேரு​வும் மகேஸும் கலந்து கொண்ட இந்த விழாவை துணை மேயர் திவ்யா உள்​ளிட்ட அன்​பில் மகேஸின் ஆதர​வாளர்​கள் ஒட்​டுமொத்​த​மாக புறக்​கணித்து விட்​டார்​கள். 


அன்பில் மகேஸின் ஆதர​வாளர்​கள் இப்​படி ஒட்​டுமொத்​த​மாக விழாவை புறக்​கணித்த நிலை​யில்,இந்த விஷயம் தற்போது திமுகவில் பூதாகரமாக வெடித்துள்ளது. உதயநிதி தரப்பில் அன்பில் மகேஷ் கையில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இது குறித்து  தலைமையிடம் கூறியுள்ளார். பச்சைக்கொடி காட்டி உள்ளார்கள் தலைமை. இந்த விஷயம்  கே என் நேருவுக்கு தெரிந்ததால் தலைமையின் மீது கடும் கோபத்தில் உள்ளாராம். மேலும் திருச்சியில் மண்டல் தேர்தல் பொறுப்பாளர்களாக நேருவின்  ஆதரவாளர்களை போட்டு வருகிறாராம். 


இதனை தொடர்ந்து தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிப்பதை நிறுத்தி வைக்க அறிவாலயத்தில் இருந்துநேருவிற்கு சமிக்கை கொடுக்கப்பட்டுள்ளது இதனால் உட்சபட்ச கோபம் அடைந்த நேரு  தேர்தல் வேலைகளில் இருந்து  முழுவதுமாக ஒதுங்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.  அன்பில் மகேஷை வைத்து திருச்சியை கைப்பற்றிக் கொள்ளுங்கள் என ஓப்பனாக சேலஞ்ச்  செய்துள்ளார். இந்த விஷயம் போட்டோ ஷூட் செய்பவருக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம் இதற்கெல்லாம் காரணம் உதயநிதி தான் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறதாம் அறிவாலயத்தின் மேல் மட்டம்