
இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்குவது மற்றும் அமெரிக்க டாலரை குறைத்து மதிப்பிடும் BRICS அமைப்புடன் இணைந்து செயல்படுவது போன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கடுப்படைந்த அமெரிக்கா இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் தொழில் தொடங்க கூடாது என வெளிப்படையாக பேசினார் அதிபர் டிரம்ப்.
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்கு எச்சரிக்கையும் விடுத்தார் டிரம்ப் எச்சரிக்கை மீறி ஆப்பிள் போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனம் 12,800 கோடியை இந்தியாவில் முதலீடு செய்தது. மேலும் டிரம்ப்பிடம் எலான் மஸ்க் இந்தியாவுடன் மோதல் போக்கை கைவிட வேண்டும் எனக்கூறியுள்ளார் இதனை தொடர்ந்து தான் அமெரிக்க அதிபரான எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் இடையே மோதல் வெடித்துள்ளது. இருவரும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே டிரம்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவருக்குப் பதிலாகத் துணை அதிபராக உள்ள வான்ஸை அதிபர் பதவியில் கொண்டு வர வேண்டும் என்று எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
இதற்கு காரணம் எலான் மஸ்க்கின் பல ஆண்டு கனவு என்பது இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்யவேண்டும் என்பதுதான். இந்தியா இதற்கு பிடிகொடுக்காமல் இருந்தது. இந்தியாவில் டெஸ்லா தொடங்கப்பட்டால் முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதால்.அனுமதி அளிக்காமல் உள்நாட்டு தயாரிப்புகளை மேம்படுத்தி வந்தது. அதில் வெற்றியும் அடைந்தது. டெஸ்லாவுக்கு நிகராக மஹிந்திரா டாடா நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தநிலையில் தான் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றார்.
ஆரம்பத்தில் இரு நாடுகளின் உறவு சுமுகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொடங்க பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்தது. எலான் மஸ்க்கின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் ஆசையில் இருந்தார். ஆனால் இந்தியாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை டிரம்ப் பல் வழிகளில் இந்தியாவிற்கு சிக்கலை தர முயன்று வந்தார். இதற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தற்போது எதிர் எதிர் துருவங்களாக மாறியுள்ளார்கள்.
இதற்கிடையே தான் நம் நாட்டில் இண்டர்நெட் சேவையை வழங்க உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சி இன்னும் 15 முதல் 20 நாட்களில் தொடங்க உள்ளது. அதன்பிறகு மக்களுக்கு ‛ஸ்டார்லிங்' நிறுவனத்தின் செயற்கைகோள் வழியாக அதிவேக இண்டர்நெட் சேவை கிடைக்கும்.உலக பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் பெரும் தொழிலதிபராக இருந்து வருகிறார். எக்ஸ் வலைதள பக்கத்தின் உரிமையாளர் இவர் தான். இதுதவிர ‛ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனம் ஸ்டார்லிங்கையும் நடத்தி வருகிறது. இந்த ‛ஸ்டார்லிங்' என்பது செயற்கைகோள் மூலம் இண்டர்நெட் சேவையை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
செயற்கைகோள் வழியாக இண்டர்நெட் வழங்குவதால் அனைத்து இடங்களிலும் இந்த சேவையை தங்கு, தடையின்றி எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் வழங்க முடியும். நம் நாட்டிலும் ‛ஸ்டார்லிங்' இண்டர்நெட் சேவையை துவங்க 2 ஆண்டுக்கு முன்பு அனுமதி கோரி எலான் மஸ்க் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டு இருந்தது.ஆனால் மத்திய அரசு உடனடியாக அனுமதி கொடுக்கவில்லை. தொடர்ந்து அனுமதி தாமதிக்கப்பட்டு வந்தது. 2 ஆண்டு காத்திருந்த ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு இப்போது அனுமதி கிடைத்துள்ளது. செயற்கைகோள் மூலம் இண்டெர்நெட் சேவையை தொடங்குவதற்கான ‛சேட்டிலை கம்யூனிகேஷன்' என்ற உரிமத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை வழங்கி உள்ளது.
இந்த உரிமத்தை இதுவரை 2 நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தியா வழங்கி இருக்கிறது.Eutelsat's one Web மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு எலான் மஸ்கின் ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு தான் இந்த லைசன்ஸ் கிடைத்துள்ளது. எனவே ‛ஸ்டார்லிங்' தனது இன்டர்நெட் சேவையை இந்தியாவிலும் விரைவில் தொடங்க உள்ளது.
இதற்கான சோதனை இன்னும் 15 முதல் 20 நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஸ்பெக்ட்ரம் விரைவில் ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக ‛ஸ்டார்லிங்' நிறுவனத்தின் செயற்கைகோள் இண்டர்நெட் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இது ஸ்டார்லிங் நிறுவனத்துக்கும் இந்தியாவுக்கும் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.இது டிரம்ப் தலையில் இடியை இறக்கியுள்ளது.