24 special

அமித் சொல்லி ஒரு நாள் ஆகல! டெல்லி விரையும் கோபாலபுர குடும்பம்! ஒரே இரவில் ஏற்பட்ட தலைகீழ் திருப்பம்! ஸ்டாலினுக்கு ஷாக்!

Amitsha,mkstalin
Amitsha,mkstalin

மத்திய உள்துறை அமைச்சர் மதுரையில் பேசிய பேச்சு திமுகவின் தூக்கத்தை கலைத்துள்ளது. மீண்டும் டெல்லி க்கு படையெடுக்க முடிவெடுத்துள்ளார் முதன்மையானவர்..ஒரு நாள் சுற்று பயணமாக தமிழகம் வந்த  மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற  பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அமித் ஷா வருகை தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை கிளப்பியது. குறிப்பாக ஆளும் தரப்பான திமுக அமித் ஷாவின் பேச்சை உன்னிப்பாக கவனித்து வந்தார்கள். 



இதற்கிடையில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமித் ஷா தலைநகர் டெல்லியில் எப்படி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைத்ததோ அதே போல 2026 இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி மலர போகிறது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள், 2026 இல் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் அமித்ஷா பேசியது திமுகவினருக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது.


ஏனென்றால் டெல்லியின் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் அரசுபோல் தமிழ்நாடு அரசு பெரிய ஊழலில் சிக்கிக் கொண்டுள்ளது ஊழலை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், டெல்லி கலால் கொள்கை ஊழலால், ஆம் ஆத்மி அரசாங்கத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை துறந்தார், கைது செய்யப்பட்டார் டெல்லியில் ஆட்சியும் கவிழ்ந்தது. மதுபான ஊழல் வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். மகள் கவிதாவும் கைது செய்யபட்டர். தெலுங்கானாவில் ஆட்சி கவிழ்ந்தது. 


இதற்கிடையே தான் தமிழகத்தில் 40,000 கோடி அளவில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சென்னயில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடந்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாளர் விசாகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அப்போது அவரின் வீட்டின் அருகில் டாஸ்மாக் ஒப்பந்தம், டெண்டர் விடுவது தொடர்பான உரையாடல்களின் நகல்கள் கிழிந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உரையாலில் தொழிலதிபர் ரத்தீஷ் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்று இருந்தது . இந்த ரதீஷ் துணைமுதல்வர் உதயநிதிக்கு  நெருக்கமானவர். அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து லண்டனிற்கு பயந்து ஓடி விட்டார். இது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. உதயநிதி விரைவில் கைது செய்யப்படுவர் என எதிர்பார்த்திருந்த நிலையில்  முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு விரைந்தார். 


இந்த நிலையில் தான் டெல்லியில் எப்படி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைத்ததோ அதே போல 2026 இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி மலர போகிறது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள், 2026 இல் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் அமித்ஷா பேசியது திமுகவினருக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது.எனது நீண்டகால அரசியல் அனுபவத்தினாலும், மக்களின் நாடி துடிப்பை அறிந்தவனாக சொல்கிறேன், வரும் தேர்தலில் தமிழக மக்கள் திமுக ஆட்சியை தூக்கி எறிவார்கள்.திமுக ஆட்சியில் ஊழல் மிக மலிந்து காணப்படுவதற்கு சாட்சி; டாஸ்மாக்கில் 35 ஆயிரம் கோடி ஊழல் நடந்து சட்டவிரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. திமுக அரசு நூற்றுக்கு நூறு சதவீதம் தோல்வி அடைந்த அரசாக காட்சி அளிக்கிறது. என அமித்ஷா திமுகவுக்கு நேரடியாகஎச்சரிக்கை செய்துள்ளார். 


டாஸ்மாக் ஊழல் குறித்து அமித்ஷா பேசியதை தொடர்ந்து அவசர ஆலோசனை திமுக தரப்பில்  ஈடுபட்டுள்ளது கோபாலபுர குடும்பம். மீண்டும் டெல்லியை நோக்கி கோபாலபுரா குடும்பம் புறப்பட தயாராகி விட்டார்களாம்.