Cinema

மும்பையில் குடியேறிய சூர்யா.... சிவக்குமாரை விட்டு ஓரம் கட்டியதன் பின்னணி..!

Suriya Jothika, Sivakumar
Suriya Jothika, Sivakumar

தமிழ் திரை உலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த சூர்யா, தற்போது கங்குவா படத்தில் பிஷியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சூர்யா நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர். ஆரமபத்தில் நடிப்பு செட் ஆகாது என்று எண்ணி சினிமாவில் விலகி சொந்த தொழில் தொடங்க இருந்த சூர்யா தனது கடின உழைப்பு மூலம் தற்போது வளர்ந்து உள்ளார். இந்நிலையில் மும்பையில் வசித்து வரும் சூர்யா குறித்து திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் சிக்ரெட் தகவலை கூறியுள்ளார்.


திரையுலகில் நடிகராகவும் சிறிய சிறிய காதா பாத்திரம் மூலம் நடித்தவர் சிவகுமார், தற்போது சினிமாவை விட்டு குடும்பத்துடன் நேரத்தை கழித்து வரும் சிவகுமார் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவரது மகன் சூர்யா நடிகை ஜோதிவை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அப்பாவை பிரிந்து மும்பையில் செட்டிலாகி உள்ளார். மும்பையில் செட்டிலாக காரணம் சூர்யா பாலிவுட் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால் மும்பைக்கு சென்றுள்ளார் என்றும் அங்கு தனது குழந்தைகள் படித்து வருவதால் அதன் காரணமாகவே சூர்யா மும்பையில் வசித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.

சூர்யா ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பிறகு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். சிவகுமார் சமீபத்தில் கலந்து கொள்ளும்  நிகழ்ச்சியில் தொடர்ந்து செல்போனைதூக்கி எறிவதும் சால்வையை தூக்கி எறிவதும் செய்து வந்ததால் தொடர்ந்து விமர்சனம் எழுந்தது இது இணையத்திலும் பேசு பொருளாக மாறியது. அதே போல சிவக்குமாருக்கும் ஜோதிகாவிற்கு பிரச்சனை ஏற்பட்டு ஜோதிகா சூர்யாவுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதை மறுத்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தில் நான் நடிக்க மாமனாரிடம் அனுமதி கேட்டேன். அதே போல, குழந்தைகளின் படிப்பிற்காகத்தான் மும்பைக்கு வந்து இருக்கிறோம். அது முடிந்ததும் சென்னையில் செட்டிலாகிவிடுவோம் என்று கூறியுள்ளார்.

அதே போல, சூர்யாவும் படப்பிடிக்கு சென்னை வந்தால், அப்பா வீட்டில் தான் தங்கி சாப்பிடுவதாக சொல்லப்படுகிறது. எது எப்படியே அழகான கூட்டு குடும்பமாக இருந்தது இப்போது இல்லை, விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வருவது போல உடைந்துவிட்டது. எது எப்படியோ குடும்பம் தனியாக வாழ்ந்து வருகிறது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட சினிமா விருதுகளில் ஜோதிகா நடித்த 36 வயதினிலேயே படத்திற்கு விருது வாங்கியது சிவகுமார் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. 

சூர்யா தமிழ் சினிமாவை ஓரம் கட்டி விட்டு மும்பை சென்றுள்ள அவர் பாலிவுட் இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில தகவல் வந்தது. அதுமட்டுமில்லாமல் சூர்யா கடந்த ஆட்சியில் திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். ஆனால், தற்போது திமுக ஆட்சியில் குரல் கொடுக்காமல் பம்மியே மும்பையில் வசித்து வருகிறார் என்றும் சினிமா வட்டாரங்களால் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.