Cinema

இளம் நடிகருக்கு வாய்ப்பு கொடுத்த சுதா கொங்கரா.. சூர்யாவை நம்பியது எல்லாம் போச்சா..?

Sudha Kongara, Suriya
Sudha Kongara, Suriya

வாய்ப்பு கொடுத்தவரை நடு தெருவில் விட்ட சூர்யா..? இனியும் பொறுக்காமல் பொங்கி எழுந்த சுதா கொங்கரா..சினிமாவில் பெண் இயக்குனராக கொடி கட்டி பரப்பவர் சுதா கொங்கரா, இவரின் படைப்புகளில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைபோற்று படம் அனைவரையும் கவர்ந்து வெற்றி சாதனை படைத்தது. இந்த நிலையில், ஹிந்தி படத்தை இயக்கி வரும் சுதா கொங்கராவுக்கு நடிகர் சூர்யா செய்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் "அலைபாயுதே" உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து, அதன் பிறகு இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் தான் சுதா கொங்கரா. இவருடைய படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆரம்பத்தில் தடுமாற்றம் அடைந்தாலும் மாதவனை வைத்து இறுதி சூற்று படம் கை கொடுத்து மேலே தூக்கி விட்டது. அதன் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து சூரரை போற்று படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும், கொரோன காலத்தில் ஓடிடியில் தான் வெளியானது. அதே படத்தை பாலிவுட்டில் அக்ஷய் குமாரை வைத்து சர்ஃபிரா எனும் தலைப்பில் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், இன்னமும் ரிலீஸ் தேதியை சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவிக்கவில்லை. 

இந்த சூழ்நிலையில், சுதா கொங்கரா மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதன் படப்பிடிப்பை தொடங்குவார் என்று இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த படம் கால தாமதமாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கான ஷூட்டிங் மதுரையில் நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில் படம் எடுக்க கால தாமதம் ஏற்படுவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

இதையடுத்து சூர்யா ஏன் காலதாமதம் செய்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் இடம் எழுந்துள்ளது. முன்னதாக வெற்றி மாறன் இயக்கத்தில் வாடி வாசல் படமும் இது போல் கால தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து இப்படி சூர்யா படத்திற்கு இயக்குனர்களுக்கு நேரம் ஒதுக்காமல் கமிட்மென்ட் கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுதா கொங்கரா மீண்டும் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் துருவ் விக்ரம் அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போகிறார் எனக் கூறுகின்றனர்.

இப்படி சூர்யாவை நம்பிய சுதாவுக்கு கடைசியில் உச்ச நட்சத்திரத்தின் கால் சீட் கிடைக்காததால் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் உடன் படம் எடுக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. சுதா கொங்கராவின் நிலைமை மோசமாகி விட்டதே என ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரமுக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய படமாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.