24 special

நீதிமன்றம் கொடுத்த அதிரடி !தமிழகத்தில் இறங்கிய சிறப்பு குழு!! அடிமடியில் கை வைத்த நீதிமன்றம்!

PMMODI,SHEHBAZSHARIF
PMMODI,SHEHBAZSHARIF

சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த விசாரணையில்அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது!பாகிஸ்தான் தூதரகஅதிகாரி அமீர் சுபைர் சித்திக் மீது தேடப்படும் குற்றவாளி என அறிவித்துள்ளது  அக்டோபர் 15 காலை 10.30க்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவைபிறப்பித்துள்ளது. 


இந்தியாவுக்குள் ஊடுருவி ரகசியமாக செயல்படும் வெளிநாட்டினரை கண்காணிக்க, மத்திய உளவுத்துறையில் 24 மணி நேரமும் செயல்படும், 'கவுன்டர் இன்டலிஜென்ஸ்' எனும் எதிர் உளவு பார்த்தல் பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவு, மாநில உளவுத் துறைகளிலும் உண்டு. ஆனால், பெயரளவில் செயல்படுவதாகவும், இப்பிரிவை பலப்படுத்துமாறும், மாநில உளவுத் துறைகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பலப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. 

இதனை தொடர்ந்து தமிழக உளவுத் துறையின் கவுன்டர் இன்டலிஜென்ஸ் பிரிவை பலப்படுத்தும் பணி துவங்கி உள்ளது. இது குறித்து, மத்திய உளவுத்துறை கண்காணித்து வருகிறது: சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டனைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரரான ஜோனாதன், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் தப்பிக்க முயன்றார். திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் இருந்த பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இலியன் ஜெட்ரொகோவ் மார்க்கோவ் தப்பி ஓடிவிட்டார். 

இம்முகாமில் தங்க வைக்கப்பட்ட இலங்கை நாட்டினர், பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்தனர். அதேபோல, சென்னை புழல் சிறை கைதிகள், 'வாட்ஸாப்' வாயிலாக, வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் ஆசாமி களை மிக எளிதாக தொடர்பு கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பத்திரிகையாளர்கள், மாணவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக வருவோர், இங்கு மத மாற்றத்திற்கான பிரசாரம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை, தமிழக காவல் துறை யினருக்கு கூறியுள்ளார்கள். 

 இதற்கிடையே பாகிஸ்தான் உளவாளியாகச் செயல்பட்ட,தமீம் அன்சாரி, கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை மண்ணடியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான்  உளவாளி ஜாகீர் உசேன், சலீம், ரபீக், ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நட்பு வட்டத்தில் இணைந்த ஜாகிர் உசேன் போதை பொருள் கடத்தல் தேசத்திற்கு எதிரான சதி வேலைகள் செய்து வந்த நிலையில்   என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரது மொபைல் போன், 'லேப்டாப்' உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. 

அவற்றில், சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துாதரகம், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், ஆந்திராவில் விசாகப்பட்டினம், கொச்சி கப்பல் கட்டும் துறைமுகம் உள்ளிட்ட பல இடங்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன.

இதனை தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய மத்திய உளவு அமைப்பு ,  படங்கள் மற்றும் வீடியோக்களை மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்த பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததும் தெரிய வந்தது. ஜாகீர் உசேன் ஒப்புதல் வாக்குமூலத்தில், 'எங்களுக்கு மூளையாகச் செயல்பட்டது, பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியைச் சேர்ந்த அமீர் சுபைர் சித்திக்,என கூறியிருந்தனர்.

அமீர் சுபைர் சித்திக் தொடர்பான வழக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந் நீதிமன்றம், அமீர் சுபைர் சித்திக் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளது.ஏற்கனவே கைது வாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில், அமீர் சுபைர் சித்திக், வரும் அக்டோபர் மாதம்  15ம் தேதி காலை 10:30 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.