24 special

எச்சரித்த ராஜ்கிரண் கேட்காமல் அவஸ்தை படும் மகள், பின்னணியில் இவரா...?

rajkiran
rajkiran

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்த ராஜ்கிரண் இந்திய திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவரது இயற்பெயர் காதர் என்பதாகும் ஆனால் ராஜ்கிரன் என்ற பெயரை திரை உலகில் மிகப் பிரபலமானது. இவர் இயக்குனராக இருந்த காலத்திலும் தயாரிப்பாளராக இருந்த காலத்திலும் பல புதுமுக நடிகர்களை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் அப்படி இவரது அறிமுகத்தால் தற்பொழுது பலர் முக்கிய இடத்தில் திரையுலகில் உள்ளனர். அதில் மிக முக்கியமானவர் வைகை புயல் வடிவேலு. மேலும் ராஜ்கிரன் பல உதவிகளை செய்து இருக்க இடமும் உடையும் வழங்கி சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பெருமளவுக்கு வடிவேலுவை பார்த்துக் கொண்டவர். தமிழ் திரை உலகில் என்ன பெத்த ராசா,  என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி என்ற படங்களில் கதாநாயகனாக நடித்து அதனை தொடர்ந்து வேங்கை, முனி, கிரீடம், பாண்டவர் பூமி, சண்டக்கோழி, நந்தா, திருத்தணி என குறிப்பிடத்தக்க படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இவருக்கு ஜீனத் பிரியா மற்றும் நைனார் முஹம்மத் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 


இந்த நிலையில் இவரது மகளான ஜீனத் பிரியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் மூலம் பிரபலமான மூனிஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்டார். முதலில் முகநூல் பக்கம் மூலம் நண்பர்கள் என்ற ஒரு வட்டாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவர்களது காதல் கதை பிறகு திருமணம் வரை சென்றது இந்த திருமணத்திற்கு ஜீனத் பிரியாவின் தந்தையான ராஜ்கிரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் திருமணத்திற்கு ஒருபோதும் சம்மதிக்க போவதில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். ஆனால் அதையும் மீறி ஜீனத் பிரியா வீட்டை எதிர்த்து முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தி தமிழ் திரை உலகை தாண்டி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சமயத்தில் ராஜ்கிரண் ஜீனஸ் பிரியா எனது உண்மையான மகளை கிடையாது வளர்ப்பு மகள் என்ற ஒரு பகிரங்க உண்மையில் தெரிவித்தார். இந்த செய்தியும் சமூக வலைதளத்தில் பேசு பொருளானது. பிறகு காலப்போக்கில் இந்த செய்தி இணைவாசிகள் மறந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ராஜ்கிரன் மகளான ஜீனத் பிரியா வீடியோ ஒன்று வெளியிட்டு மற்றுமொரு பேசு பொருளாக மாறி உள்ளார். 

அதாவது நான் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன் அவரை மீடியா மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அந்த திருமணத்திற்கு பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம் பிரிந்து சில மாதங்களாகிறது, எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை! இந்த கல்யாணத்திற்கு பிறகு என்னை வளர்த்த அப்பா மிகவும் கஷ்டத்தை அனுபவித்தார். அவருக்கு நான் அதிக கஷ்டங்களை கொடுத்து விட்டேன். முனீஸ் ராஜா திருமணம் செய்து கொண்ட பிறகு எனக்கு சில பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. அந்த நேரத்தில் கூட என்னுடைய வளர்ப்பு என்னை கைவிடவில்லை பல உதவிகளை செய்தார் அவை அனைத்தும் நான் எதிர்பாராத கருணை! அதற்காக நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் அப்பா என்று ஜீனத் பிரியா ஒரு வீடியோவில் பேசி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, மேலும் இந்த சதிச்செயலுக்கு பின்னணியில் நாடககாதலுக்கு பெயர்போன ஒரு அரசியல் இயக்கம் இருக்கலாம் எனவும் வேறு விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது...