Tamilnadu

உலகமே வியக்கும் வகையில் பாயிண்ட் தெரிவித்த ஆர்.கே.. ! சிரிப்பாய் சிரிக்கும் நார்த் இந்தியன்ஸ்...!

Rahul and R.K
Rahul and R.K

5 மாநில தேர்தல் முடிவுகளை ஒட்டி தமிழகத்தின் முன்னணி ஊடகங்களில் பல்வேறு பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர் 5 மாநிலங்களில் எப்படி பாஜக வென்றது, வியூகம் என்ன?  எந்த வகையில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என அலசி ஆராய்ந்தனர், பல பத்திரிகையாளர்கள் பாஜக வெற்றி என்பதை அங்கீகரிக்க மனமின்றி மத ரீதியாக பெற்ற வாக்கு என  ஒதுங்கி நின்றனர்.


இந்த நிலையில் பத்திரிகையாளர் ஆர்.கே  தனியார் ஊடகத்தில் தெரிவித்த கருத்து உலகமே வியக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கிண்டல் எழுந்துள்ளது, நெறியாளர் கார்த்திகை செல்வன் ராகுல் காந்தியின் பேச்சு, கருத்து ஆகியவை பேசுபொருளாக மாறுகிறது ஆனால் வாக்காக மாறவில்லையே என கேள்வி எழுப்பினார்.

அப்போதுதான் உலகம் வியக்கும் கருத்தை தெரிவித்தார் ஆர்.கே.. ராகுல் காந்தியின் செயலை காங்கிரஸ் கட்சியினர் சரியாக பயன்படுத்தவில்லை தமிழகத்தில் வந்து பிரியாணி செய்து அசத்தினார், அப்போது அந்த சேனலை சேர்ந்தவர்களை அழைத்து அவர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்த்து இருக்கவேண்டும் அப்படி என்றால் காங்கிரஸ் வளரும் என தெரிவித்தார்.

அதாவது பிரியாணி செய்தால் கட்சி வளரும் என உலகம் வியக்கும் அரிய கண்டுபிடிப்பை கருத்தாக தெரிவித்துள்ளார், இது தற்போது இணையத்தில் வைரலாக அடடா? இப்படி பட்ட பத்திரிகையாளர்கள்தான் வட இந்தியர்கள் குறித்து விமர்சனம் செய்கிறார்களா? என்ன அறிவு எனவும் பல்வேறு நபர்களும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

மூத்த பத்திரிகையாளர் ஆர்கே தற்போது மூத்த பிரியாணி மாஸ்டர் எனவும் மீம்ஸ்கள் இணையத்தில் பறக்க விடுகின்றனர் பாஜகவினர்.